திருப்பூர், ஆக. 7 - ஹரியானா மாநிலத்தில் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்லவும், கலவரத்திற்கான காரணத்தை கேட்டறிந்து மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்திடவும் ஹரியானாவிற்கு நேரில் சென்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய செய லாளர் அமர்ஜீத் கவுர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பினாய் விஸ்வம், சந்தோஷ்குமார் ஆகியோ ருக்கு அனுமதி வழங்க மறுத்து காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் களை தடுத்து நிறுத்திய ஹரியானா காவல் துறை நடவடிக்கைகளை கண்டித்தும், சிறு பான்மை மக்களை பாதுகாக்க வேண்டும் என்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாநகர் மாவட்ட குழுவின் சார்பில் குமரன் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் எஸ்.ரவிச்சந்திரன் தலைமை ஏற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ரவி கண்டன உரையாற்றினார். மண்டல குழு செயலாளர் கள் எஸ். செல்வராஜ், வி.எஸ்.சசிகுமார், ஆர்.செந்தில்குமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.