உடுமலை, ஜூன் 12- சுய திறன் மீது நம்பிக்கை வைத்து கடின மாக உழைத்தால் வெற்றி நிச்சயம் என்று ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற எஸ்.சந்தோஷ் குமார் கூறினார். சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற எஸ்.சந்தோஷ் குமார் உடன் சாதனையாளர் சந்திப்பு நிகழ்வு உடுமலைபேட்டை மாதிரி நூலகத்தின் வாசகர் வட்டம் சார்பில் ஞாயி றன்று நூலகத்தில் நடைபெற்றது. இதில் நூலக வாசகர் வட்டத் தலைவர் க.லெனின் பாரதி தலைமை வகித்தார். நூலகர் அ.பீர் பாஷா வரவேற்றார். சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற எஸ்.சந்தோஷ் குமாருக்கு நூலக வாசகர் வட்டத்தினர் பாராட்டி சிறப்பு செய்தனர். பின்னர், போட்டித் தேர்விற்கு தயாரா கும் மாணவ, மாணவிகளுடன் கலந்துரை யாடல் நடைபெற்றது. இதில் தேர்வர்களின் கேள்விகளுக்கு விடையளித்து சந்தோஷ் குமார் பேசினார். அப்போது அவர் கூறுகை யில், யு.பி.எஸ்.சி என்பது கடினமான தேர்வா கும். மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் சோர்வடையச் செய்யும். எனவே இந்த தேர் வுக்குத் தயாராவோர் தங்கள் திறன்களின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பது முக் கியம். நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். அந்த இலக்கை நோக்கி கடுமையாக உழைக்க வேண்டும். அதை அடைவதற்கு மட்டுமே ஆற்றலை செலவழிக்கிறோம் என் பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். வேறு எந்த கவனச் சிதறல்களுக்கும் இடம்
கொடுக்காதீர்கள். மனம் தளராமல் வெற்றி பெறுவோம் என்ற நல்ல சிந்தனையுடன் முயல வேண்டும். தேர்வில் எந்த மாதிரியான கேள் விகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என சுயமாக புரிந்து வைத்து கொள்ளுதல் தான் வெற்றிக்கு வழி வகுக்கும். இணையம் வளர்ந்து வரும் நிலையில் நகரம் கிராமம் என்ற வேறுபாடுகள் களையப்பட்டுள்ளது, ஆகவே இணையம் வாயிலாக கற்கும் வாய்ப்புகளை பயன்படுத்திட வேண்டும். ஐ. ஏ. எஸ், தேர்வுக்கான பாட திட்டம் பெரியது, அதை புரிந்து படிக்க வேண்டும். பயிற்சி மையத்தில் பணியிலிருக்கும் அதி காரிகள், ஆசிரியர்கள், ஆகியோரின் ஆலோ சனைகள் பெற்றது மிகவும் உதவியாக இருந்தது. முயற்சி செய்தால் வெற்றி எல் லோர்க்கும் சாத்தியம் என்று பொத்தாம் பொதுவாக எண்ணிவிடாமல் புரிந்து படித்தல், குழுவாகப் படித்தல், தோல்விகள் குறித்து வருந்தாமல் ஏற்றுக் கொள்ளுதல், தொடர்முயற்சி, ஆகியவைகளும் அரசின் பயிற்சி வகுப்புகளையும் பயன்படுத்தி கொண்டதும் வெற்றியை சாத்தியமாக்கியி ருக்கிறது. தேர்வுக்கு தயாராகும் பணியில் ஈடுப டும்போது நிறைய பேர் தங்களை தயார்ப டுத்திக் கொள்ள தவறி விடுகிறார்கள். உங்க ளின் உடல், மனம் மற்றும் உணர்ச்சி போன்ற வற்றை சோதிக்கும் ஒன்றாகவும் இந்த தேர்வு அமையும். இவை அனைத்தையும் நிர்வகிப்பதற்கு பழகிக் கொள்ள வேண்டும். தேர்வில் நீங்கள் சிறப்பாக செயல்படு வதை உறுதி செய்வதற்கு உங்களை நீங்கள் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.” என்று பேசினார். நூலக வாசகர் வட்ட நிர்வாகிகள் எம். தண்டபாணி, பி.வேலாயுதம், வி.கண்டி முத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.