கோவை, ஆக.4- ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் தலைவரின் நினைவுதினம் கோவையில் அனுசரிக்கப்பட்டது. சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் கோவை மாவட்ட முன்னாள் தலைவர் தோழர் எம்.ராமசாமியின் எட்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, வெள்ளியன்று பூமார்க்கெட் பகுதியில் நடைபெற்றது. இதில், சிஐடியு கோவை மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் இரா.செல்வம், பொதுச்செயலாளர் எம்.கே.முத்துகுமார், ஆட்டோ சங்க நிர்வாகிகள் கே.பழனியப்பன், ஏ.மாணிக்கவாசகம் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். முன்னதாக, மறைந்த தோழர் எம்.ராமசாமி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர்த்தூவி ஆட்டோ தொழிலாளர்கள் அஞ்சலி செலுத்தினர்.