districts

img

மாணவர் விடுதியில் ஆட்சியர் ஆய்வு

கோவை, ஜூலை 7- வெள்ளக்கிணறு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு விடு தியில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் திடீர் ஆய்வு  மேற்கொண்டார். கோவை மாவட்டம், வெள்ளக்கிணறு பகுதியில் செயல் பட்டு வரும் அரசு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிதிரா விடர் மாணவர் நல விடுதியில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீ ரன் புதனன்று இரவு திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதில்,  மாணவர்களின் படுக்கையறைகள், குளியலறை, கழிப்பிடம்  ஆகிய பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, மாணவர்களிடம் விடுதியில் உள்ள அடிப்படை வசதிகள், உணவின் தரம் குறித்தும் கேட்டறிந்தார். இதையடுத்து, துடிய லூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற் கொண்ட ஆட்சியர், அங்குசிகிச்சை பெற்று வரும் நோயாளி களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும், செவிலியர், மருத் துவப் பணியாளர்களிடம் மருத்துவ அலுவலரின் செயல்பாடு கள் குறித்து கேட்டறிந்தார்.