தருமபுரி, ஜூலை 10- நல்லம்பள்ளி வட்டம், ஒட்டப்பட்டி ஊராட்சி மன்ற அலுவ லகத்தில் நடைபெற்ற மெகா தடுப்பூசி சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கொரோனா பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப் பூசியை செலுத்த தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதன்ஒருபகுதியாக அனைத்து மாவட்டங்களிலும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது. இதன்ஒரு பகுதியாக ஞாயிறன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை தருமபுரியில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. தருமபுரி மாவட்டத்தில் அனைத்து அரசு மருத்துவமனை கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலை யங்கள் மற்றும் 2 ஆயிரத்து 84 சிறப்பு முகாம்களில் 100 விழுக்காடு தடுப்பூசி செலுத்துவதை இலக்காக கொண்டு “மெகா தடுப்பூசி முகாம்” நடைபெற்றது. இதற்கிடையே தரும புரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், ஒட்டப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற மெகா தடுப்பூசி சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி நேரில் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார்.