நாமக்கல், அக்.6- நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், காளப்ப நாயக்கன்பட்டி குறுவட்டம், உத்திரகிடிகாவல் வருவாய் கிராமத்தில் வருகின்ற அக்.12தேதியன்று மக்கள் தொடர்பு முகாம் நடைபெறவுள்ளது. முகாம் குறித்த ஆலோசனை மற்றும் ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் தலைமையில் வியாழனன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், மக்கள் தொடர்பு முகாம் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது புதனன்று நடத்தப்பட வேண்டும். அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில், சேந்தமங்கலம் வட்டம், காளப்பநாயக்கன்பட்டி குறு வட்டம், உத்திரகிடிகாவல் வருவாய் கிராமத்தில் வரு கின்ற அக்.12தேதியன்று மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இம்முகாமில் பொதுமக்கள், மாற்றுத் திறனாளிகள் அதிகளவில் பங்குபெற செய்ய வேண்டும். திறன் மேம்பாட்டு பயிற்சி பெற தகுதியுடைய இளைஞர் களின் தேவைகளை பூர்த்தி செய்திடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மகளிர் சுய உதவிக்குழுக்களின் படைப்புகளை சந்தைப்படுத்திட வேண்டும். இம்மக்கள் தொடர்பு முகாமினை பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ள தாக அமையும் வகையில் அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். என்றார். இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.வடிவேல், நாமக்கல் வருவாய் கோட்டாட் சியர் த.மஞ்சுளா, சமூக பாதுகாப்புத்திட்டம் தனித்துணை ஆட்சியர் ஜெ.தேவிகாராணி உட்பட அரசுத்துறை அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.