districts

img

கோவை: தேவாலயத்தில் சிலை சேதம்

விஷமிகளால் சேதப்படுத்தப்பட்ட  செபஸ்தியர் சிலை

கோவை, ஜன.24- கோவையில் கிறிஸ்தவ தேவா லயத்தில் வைக்கப்பட்டிருந்த செபஸ்தியர் சிலையை சேதப்படுத்திய விஷமிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தியுள்ளர். கோவை, ராமநாதபுரம் சிக்னல் அருகே டிர்னிட்டி கிறிஸ்தவ தேவாலயம் செயல் பட்டு வருகிறது. இந்த தேவாலயத்தின் நுழைவு வாயில் அருகே செபஸ்தியர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஞாயி றன்று இரவு இருசக்கர வாகனத்தில் வந்த 2 அடையாளம் தெரியாத நபர்கள் தேவா லயத்தின் நுழைவாயிலில் இருந்த சிலையை உடைத்து சேதப்படுத்திவிட்டு தப்பி ஓடி யுள்ளனர். இதுகுறித்து தேவாலயத் தின் பாதிரியார் அளித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, செபஸ்தியார் சிலையை திட்டமிட்டு சமூக விரோதிகள் சேதப் படுத்திய சம்பவம் பல்வேறு தரப்பினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கோவை யில் எப்படியேனும் மத துவேசத்தை விசிறி விட்டு ஆதாயம் தேடும் முயற்சியில் ஒரு  கும்பல் களமிறங்கியுள்ளது தெளிவாக தெரியவருகிறது. ஏற்கனவே வெள்ளளூ ரில் தந்தை பெரியார் சிலையை சேதப் படுத்தி, இந்துத்துவ அடிப்படைவாத கும் பல் பதட்டத்தை உருவாக்கியது. இது தொடர்பாக காவல் துறையினர் மேற் கொண்ட துரித நடவடிக்கை காரணமாக சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.  

இந்நிலையில் தற்போது செபஸ்தியார் சிலையை சேதப்படுத்திய சம்பவம் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, காவல் துறையினர் உடனடியாக தீவிர விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண் டும். அதேநேரத்தில் விஷமிகளின் இது போன்ற திசை திருப்பல் நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒருபோதும் இரையாக வேண் டாம் என்றும், இத்தகைய சமூக விரோதி களை தனிமைப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இதேபோன்று மார்க்சிஸ்ட் கட்சியின்  மாநிலக்குழு உறுப்பினரும், கோவை மக் கள் மேடையின் ஒருங்கிணைப்பாளருமான சி.பத்மநாபன், தீண்டாமை ஒழிப்பு முன் னணி மாநில துணை பொதுச்செயலாளர் யு.கே.சிவஞானம் உள்ளிட்ட தலைவர்க ளும் சிலை சேதப்படுத்திய சம்பவத்திற்கு கண்டனமும், உடனடியாக காவல்துறையி னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  வலியுறுத்தியுள்ளனர்.