அரசு கல்லூரி பேராசிரியர்களுக்கு பயிற்சி
கோவை, மே 5- கோவை அரசு கலைக்கல்லூரியில் பேராசிரியர்க ளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழ்நாடு மாநில உயர் கல்வி மன்றம் சார்பில் தமிழ கத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் பேரா சிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப் பட்டது. இதன்படி கோவை அரசு கலை அறிவியல் கல்லூரி யில் துவங்கிய இரண்டு நாள் பயிற்சி முகாமில் தமிழ், ஆங்கி லம், கணிதம், இயற்பியல் அறிவியல் ஆகிய பாடங்களை நடத்தும் பேராசிரியர்களுக்கு வியாழனன்று பயிற்சி அளிக் கப்பட்டது. கல்லூரி முதல்வர் கலைச்செல்வி முன்னிலை யில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில் உயர்கல்வி தர மேம்பாடு, தொழில்நுட்ப வசதிகளை கற்பித்தலுக்கு பயன்படுத்துதல், கல்லூரிகளுக்கான தேசிய தர அங்கீ காரம் பெறுவது, மென்பொருள் மேம்பாடு, ஆராய்ச்சி மேம்பாடு, தொழில்துறையில் எதிர்காலத்தில் ஏற்படும் பணி வாய்ப்புகள் மற்றும் அதற்கேற்ற திறன்கள் குறித்து பல்வேறு நிபுணர்கள் பயிற்சி அளித்தனர். இம்முகாம் வெள்ளிக்கிழமையும் (இன்று) நடைபெற உள்ளது.
50 கிலோ கஞ்சா கடத்தல்: இளம்பெண் கைது
கோவை, மே 5- கோவை மாவட்டம், சூலூர் காங்கயம்பாளையம் பகுதி யில் தனிப்படை போலீசார் வியாழனன்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சந்தே கத்திடமாக சென்ற பெண்ணை நிறுத்தி சோதனை செய்தனர். அவர் வைத்திருந்த பையில் பண்டல் பண்டலாக கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் மேற் கொள்ளப்பட்ட விசாரணையில், அவர் மதுரை உசிலம் பட்டியைச் சேர்ந்த மலைச்சாமி என்பவரது மனைவி ஜெய பாண்டியம்மாள் (30) என்பதும், இவர் தேனி, உசிலம்பட்டி பகுதிகளில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து, கோவை யில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவரிடமிருந்த 50 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து சிறையில் அடைத்த னர்.
தூய்மை பணியாளர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு
இளம்பிள்ளை, மே 5- இடங்கணசாலையில் தூய்மை பணியாளர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது. சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சியில் நகர்ப் புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தூய்மை பணியாளர்கள், சுய உதவிக் குழுக்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் புதனன்று நகராட்சி அலுவலக வளாகத்தில் நடை பெற்றது. இம்முகாமில் குப்பையின் வகைகள், வீட்டில் உருவாகும் இடத்திலேயே தரம் பிரித்தல், அளவு மதிப்பீடு, மக்கும் - மக்காத குப்பை, அபாயகரமான கழிவுகளை வகைப்படுத்துதல் குறித்து விளக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நகராட்சியில் சிறப்பாக பணியாற்றிவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. முன்னதாக, இந்நிகழ்ச்சிக்கு நகராட்சி தலைவர் கமலக் கண்ணன் தலைமை வகித்தார். இதில், துணை தலை வர் தளபதி, சேலம் மண்டல தூய்மை இந்தியா திட்ட வல்லுநர் கள் ராஜேஸ்வரி, மரியநாதன், சுகாதார ஆய்வாளர் நிரு பன் சக்கரவர்த்தி, துப்புரவு மேற்பார்வையாளர் இளங்கோ, நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் தூய்மை பணியாளர் கள் பலர் கலந்து கொண்டனர்.
கோவை: வடமாநில இளைஞர் உடல் அழுகிய நிலையில் மீட்பு
கோவை, மே 5- கோவையில் தங்கி வேலை செய்து வந்த வடமாநில வாலிபர் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை தெப்பகுளத்தை சேர்ந்த கோபால் என்பவ ருக்கு சொந்தமான வீடு ஆர்.எஸ்.புரம் லிங்கப்பசெட்டி வீதி யில் உள்ளது. இந்த வீட்டில் உள்ள 3 ஆவது மாடியில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த முஜீபூர் மாலிக் (24) மற்றும் அவரது உறவினர்கள் 4 பேர் வாடகைக்கு தங்கியி ருந்தனர். இந்நிலையில், வீட்டின் உரிமையாளர் கோபால், வாடகை வாங்குவதற்காக அவர்கள் தங்கி இருந்த வீட் டிற்கு சென்றார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நிலை யில், சமையல் அறையிலிருந்து தூர்நாற்றம் வந்துள்ளது. இதையடுத்து கோபால், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சமை யல் அறையில் முஜிபூர் மாலிக் இறந்து கிடந்தார். அவர் இறந்து 30 நாட்களுக்கு மேல் இருக்கும் என்பதால் உடல் அழுகிய நிலையில் இருந்தது. அவருடன் தங்கி இருந்த 4 பேரும் மாயமாகி இருந்தனர். இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஆர்.எஸ்.புரம் காவல்துறையினர் முஜிபூர் மாலிக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதன்பின் காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், முஜிபூர் மாலிக்கிற்கும் அவருடன் தங்கியிருந்த உறவினர்க ளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்தி ரமடைந்தவர்கள் முஜிபூர் மாலிக்கை கொலை செய்துவிட்டு வீட்டை பூட்டி விட்டு தப்பிச்சென்றது தெரியவந்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
ஈரோடு: உணவகங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை
ஈரோடு, மே 5- ஈரோட்டில் உணவு பாதுகாப்பு அதிகாரி கள் நடத்திய திடீர் சோதனையில் 3 உண வகங்களுக்கு அபராதம் விதித்தனர். உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆணையர் உத்தரவின் பேரிலும், ஈரோடுமாவட்ட ஆட்சியர் அறிவு றுத்தலின் பேரிலும், மாவட்ட உணவு நியமன அலுவலர் தங்க விக்னேஷ் தலைமையி லான உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஈரோட்டில் புதனன்று சவர்மா கடைகள் மற்றும் அசைவ உணவகங்கள் உட்பட 15 கடைகளில் தீவிர சோதனை மேற்கொண்ட னர். இந்த சோதனையின் போது சமைத்து பின்னர் குளிர்பதன பெட்டியில் வைக்கப் பட்டிருந்த 35 கிலோ இறைச்சிகள் பறி முதல் செய்யப்பட்டது. மேலும், சுகாதா ரமான முறையில் பராமரிக்காத 3 உணவ கங்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக் கப்பட்டது. மேலும், தொடர்ந்து 2 ஆவது நாளான வியாழனன்று அசைவ உணவ கங்களில் மாவட்ட உணவு நியமன அலு வலர் தங்க விக்னேஷ் தலைமையில் அதி காரிகள் சோதனை மேற்கொண்டனர். இதுகுறித்து உணவு நியமன அலுவ லர்கள் கூறியதாவது, ஈரோடு மாநகர் பகு தியில் புதனன்று மாலை சவர்மா தயா ரிக்கும் ஓட்டல்கள், அசைவ உணவகங்கள் உட்பட 15 கடைகளில் சோதனை செய்ததில் சமைத்து பின்னர் குளிர் பெட்டியில் வைக் கப்பட்டிருந்த 35 கிலோ இறைச்சிகள் பறி முதல் செய்யப்பட்டுள்ளன. பொரித்த எந்த வகை உணவாக இருந்தாலும் அவற்றை பேப்பரில் வைத்து விற்றால் கடும் நட வடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு விற்கும் உணவகங்களுக்கு அபராதம் விதிக்கப் படும். பொரித்த உணவுகளை பேப்ப ரில் வைத்து விற்க கூடாது. அது உடல்நலத் திற்கு கேடாகும். நாளொன்றுக்கு 3 ஆயி ரத்துக்கும் மேல் வியாபாரமாகும் உணவ கங்கள் கண்டிப்பாக உரிமம் வைத்திருக்க வேண்டும். 3 ஆயிரத்துக்கு கீழ் உள்ள கடை கள் உரிமம் பதிவு செய்திருக்க வேண்டும். பொதுமக்கள் உணவு பொருள் சம்பந்தப் பட்ட புகார்களுக்கு 9444042322 என்ற வாட்சப் எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
தமுஎகச புதிய நிர்வாகிகள் தேர்வு
ஈரோடு, மே 5- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங் கத்தின் ஈரோடு மாணிக்கம் பாளையம் கிளை அமைப்பு மற்றும் முதல் மாநாடு அண் மையில் நடைபெற்றது. இதில், சங்கத்தின் மாவட்ட செயலாளர் மு.சங்கரன், முன் னாள் நகர்மன்ற தலைவர் சா.த.பிரபாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதை யடுத்து சங்கத்தின் புதிய கிளை தலைவராக இரா. செந்தில்குமார், துணைத் தலைவராக மு.உதயகுமார், செயலாளராக த.ரமேஷ், துணைச்செயலாளராக தினேஷ்குமார், பொருளாள ராக இமயவர்ஷினி மற் றும் செயற்குழு உறுப்பி னர்கள் தேர்வு செய்யப்பட் டனர். மாநிலக்குழு உறுப்பி னர் தி.தங்கவேல் நிறை வுரையாற்றினார்.
போர்ச்சுக்கல்லில் இன்டர்டெக் கண்காட்சி தொழில்துறையினருக்கு அழைப்பு
திருப்பூர், மே 5- போர்ச்சுக்கல் நாட்டில் இன்டர்டெக் கண்காட்சி வரும் ஜூன் 2 ஆம் தேதி துவங்கி 4 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கண்காட்சியில் நூல், துணி, ஆயத்த ஆடைரகங் கள், பட்டன், ஜிப் போன்ற ஆடை தாயரிப்புக்கு பயன்படுத் தப்படும் துணை பொருட்கள், ஜவுளி உற்பத்தி இயந்திரங் கள் இடம்பெறுகின்றன. போர்ச்சுக்கல்லுக்கு அருகாமையில் உள்ள ஜரோப்பா மட்டுமின்றி, பல்வேறு நாட்டு வர்த்தகர்கள் கண்காட்சியை பார்வையிட்டு வர்த்தக விசாரணைகள் நடத்த உள்ளனர். கடந்த 2020 ஆம் ஆண்டு நிலவரப்படி போர்ச்சுக்கல், உலக அளவில் ரூ.15,311 கோடி மதிப்பிலான ஆயத்த ஆடை ரகங் களை இறக்குமதி செய்துள்ளது. இதில் இந்தியாவின் பங்க ளிப்பு 282 கோடி ரூபாய் ஆகும். மிகப்பெரிய வர்த்தக வாய்ப்பு களை ஈட்டித்தரும் இந்த கண்காட்சியில், இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் பங்கேற்க ஏ.இ.பி.சி., அழைப்பு விடுத்துள்ளது. கண்காட்சி குறித்து மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் 042122 32634 94422 89222 என்கிற எண்களில் ஏ.இ.பி.சி., அலுவல கத்தை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவிநாசி: ரூ.29 லட்சத்திற்கு பருத்தி ஏலம்
அவிநாசி,மே 5- அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் பருத்தி ஏல வர்த்தகம் நடைபெற்று வருகிறது. அதன்படி புதனன்று நடைபெற்ற பருத்தி ஏலத்தில், ரூ.29லட்சத்து 77ஆயிரத்துக்கு பருத்தி ஏல வர்த்தகம் நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற பருத்தி ஏலத்திற்கு மொத்தம் 890 பருத்தி மூட்டைகள் வந்திருந்தன. பருத்தி வரத்து அதிகரித்து இருந்தது. இதில், ஆர்.சி.எச். பி.டி. ரகப்பருத்தி குவிண்டால் ஒன் றுக்கு ரூ.11000 முதல் ரூ.12411 வரையிலும், டிசிஎச். ரகப் பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.11000 முதல் ரூ.12450 வரையிலும், கொட்டுரக (மட்டரக) பருத்தி குவிண்டால் ஒன் றுக்கு ரூ.3000 முதல் ரூ.6000 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.29 லட்சத்து 77ஆயிரத்துக்கு பருத்தி ஏல வர்த் தகம் நடைபெற்றது. இந்த ஏலத்தில், ஆத்தூர், மேட்டூர், கோபி, நம்பியூர், மலையப்பாளையம், சத்தியமங்கலம், கொள்ளேகால், அந்தியூர், அத்தாணி, அவிநாசி, புளியம் பட்டி, குன்னத்தூர் ஆகிய பகுதிகளிலிருந்து 206 பருத்தி விவ சாயிகளும், கோவை, ஈரோடு பகுதியிலிருந்து 23 பருத்தி வியாபாரிகளும் பங்கேற்றனர்.
அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேர்த்திருவிழா ஆலோசனைக் கூட்டம்
அவிநாசி, மே 5- அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேர்த்திருவிழா மே 5 ஆம் தேதி தொடங்குவதையொட்டி அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேர்த்திருவிழா மே 5 ஆம் தேதி தொடங்கி மே 18 ஆம் தேதி வரை நடைபெறவுள் ளது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் மே 12, 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெகிறது. இதையொட்டி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அவிநாசி நான்கு ரத வீதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, பொதுமக்களின் வசதிக் காக ஆங்காங்கே தற்காலிக கழிப்பறைகள் மற்றும் தற்கா லிக குடிநீர் தொட்டிகள் அமைத்தல், தேரோடும் வீதியில் கண்காணிப்பு கேமராக்களை அமைத்து கண்காணித்தல், பேரூராட்சி சார்பில் கூடுதலாக குடிநீர் விநியோகித்தல், தூய்மைப் பணியை அவ்வப்போது மேற்கொள்ளுதல் என முடிவு செய்யப்பட்டது. குறிப்பாக இந்து அறநிலையத் துறை சார்பில், அவிநாசி கோயில் தேர்களின் நிலைத்தன்மை குறித்து, பொதுப்பணித் துறையினரிடம் உறுதிச் சான்று பெற்று வழங்க வேண் டும். கொரோனா விதிமுறைகளை பின்பற்றி குறிப்பிட்ட நேரத்தில் தேரோட்டம் தொடங்க வேண்டும் என்பன உள் ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
புகையிலை விற்ற 2 பேர் கைது
திருப்பூர், மே 5- வெள்ளகோவிலில் காவல் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப் போது, முத்தூர் சாலையில் உள்ள மளிகை மற்றும் பெட்டி கடைகளை சோதனையிட்டதில் வீரப்பகவுண்டர் மகன் கார்த் திகேயன், பழனிச்சாமி மகன் அருண்பிரகாஷ் ஆகிய இரு வரும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொட்டலங் களை விற்பனைக்காக வைத்திருந்தனர். இதையடுத்து இரு வரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த புகையிலை பொட்டலத்தை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எல்ஐசி தனியார்மயத்திற்கெதிராக போராட்டம்
திருப்பூர், மே 4- எல்ஐசியின் பங்கு விற்பனையை கண்டித்து, திருப் பூர், காங்கயம், தாராபுரம், உடுமலைப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் எல்ஐசி ஊழியர்கள் புதனன்று 2 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 11.30 மணியில் இருந்து பகல் 1.30 மணி வரை, 2 மணி நேர போராட் டம் நடந்தது. திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள எல்ஐசி பிரதான அலுவலகம் முன்பு நடந்த போராட்டத் துக்கு சங்கத்தின் செயலாளர் சஞ்சய் ராஜா, பொருளாளர் ரெங்கராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். இந்த போராட்டத் தில், எல்ஐசியின் பங்குகளை விற்க கூடாது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், எல்.ஐ.சி தனியார் மய மாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஊழியர்கள் முழக் கங்கள் எழுப்பினர்.