உடுமலை, நவ.23- மடத்துக்குளம் தாலுகாவில் கொப்பரைக் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத் தின் மடத்துக்குளம் தாலுகா மாநாட்டில் தீர்மா னம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத் தின் மடத்துக்குளம் தாலுகா மாநாடு விக் கேஸ்வரா திருமண மண்டபத்தில் ஜோத்தம் பட்டி சிவராஜ் தலைமையில் நடைபெற்றது. இம்மாநாட்டில் மடத்துக்குளம் தாலுகா விவ சாயிகள் கொப்பரையை விற்பனை செய்ய கூடுதல் செலவு செய்து உடுமலைக்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இதை தவிர்க்க மடத்துக்குளம் தாலுகாவில் கொப் பரைக் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். தென்னை விவசாயிகளிடம் ஏக்கர் ஒன் றுக்கு 350 கிலோ கொப்பரையை அரசு கொள் முதல் செய்ய வேண்டும். ஒன்றிய, மாநில அர சுகள் தென்னை சார்ந்த விவசாயத்திற்கு வழங்கும் நலத்திட்டங்கள் அனைத்து விவசா யிகளுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரேசன் கடைகளில் தேங்காய் எண் ணையை விற்பனை செய்ய வேண்டும். தென்னை நார் கழிவுகளை விவசாய நிலங்க ளில் கொட்டுவதை தடுக்கும் வகையில் வேறு ஆயக்கட்டு பகுதியில் இருந்து மற்ற ஆயக் கட்டு பூமியில் கொண்டு செல்லத் தடை விதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல் வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தின் மடத்துக்குளம் தாலுகா தலைவராக தயானந்தன், செயலா ளராக சிவராஜ், பொருளாளராக ராமசாமி, துணைத் தலைவார்களாக எம்.எம்.வீரப்பன், நித்யானந்தம், துணைச் செயலாளார்களாக தர்மராஜ், விக்கேஷ் உள்ளிட்ட 14 பேர் கொண்ட ஒன்றியக்குழு தேர்வு செய்யப்பட் டது. முன்னதாக இந்த மாநாட்டில் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் விஜயகுமார், மாநிலத் தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன், கரும்பு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் பாலதண்டபாணி, எம்.எம்.வீரப்பன். தென்னை விவசாயிகள் சங் கத்தின் மாவட்டச்செயலாளர் அருண்பிர காஷ், மாவட்டப் பொருளாளர் லெனின், தமிழ் நாடு விவசாய சங்கத்தின் நிர்வாகிகள் ராஜரத் தினம், ராஜகோபால் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.