districts

பொள்ளாச்சியில் ஜூலை 24 ஆம் தேதி முதல் தேங்காய் ஏலம்

கோவை, ஜூலை 16- பொள்ளாச்சி ஒழுங்குமுறை விற் பனை கூடத்தில் ஜூலை 24 ஆம் தேதி யன்று முதல் தேங்காய் ஏலம் நடை பெற உள்ளதாக கண்காணிப்பாளர் தெரி வித்தார். கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதியில் தென்னை விவசாயம் முக் கிய தொழிலாக உள்ளது. சுமார் 20 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட ஹெக்டேர் பரப்ப ளவில் தென்னை சாகுபடி செய்யப்பட் டுள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் தேங்காய் கோவை மாவட்டம் மட்டு மல்லாது, வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு குறிப்பிட்ட விலை நிர்ணயம் செய்து அனுப்பப்படு கின்றன. தற்போது மார்க்கெட்டில் தேங் காய் ஒரு கிலோ ரூ.20 முதல் ரூ.25 வரை குறைந்த விலைக்கு விற்பனை செய்யப் படுகிறது. தேங்காய் விலை வீழ்ச்சி கார ணமாக விவசாயிகளுக்கு போதிய லாபம் கிடைப்பதில்லை என தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தினர், அண்மையில் தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது மாநி லம் அளவில் பெரும் பேசுபொருளாக மாறியது. இதன் எதிரொலியாக பொள் ளாச்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத் தில், தேங்காய் கொள்முதல் செய்ய நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வாரந்தோறும் திங்கட் கிழமைகளில் ஏலம் மூலம் விவசாயி களிடம் இருந்து நேரடியாக கொள் முதல் செய்யப்படுகிறது. மறைமுக ஏலம் முறையில் வியாபாரிகளுக்கு விற் பனை செய்து கொடுக்கப்படும். இந்த  கொள்முதல் ஜூலை 24 ஆம் தேதியன்று முதல் நடைபெறும். பொள்ளாச்சி சுற்று வட்டார விவசாயிகள் இந்த வாய்ப் பினை பயன்படுத்தி கொள்ள வேண் டும். மேலும், பொள்ளாச்சி விற்பனை கூட கண்காணிப்பாளர் மற்றும் மேற்பார் வையாளரை 9894687827, 9944833678 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ள லாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.