திருப்பூர், டிச.21- திருப்பூர் மாநகராட்சி, கோல்டன் நகர், சர்கார் நாயக்கர் மஹால் மற்றும் கெஜலட்சுமி தியேட்டர் ரோடு, குஜராத் மஹால் ஆகிய இடங்களில் ”மக்களுடன் முதல்வர்” திட்டத் தின் கீழ் நடைபெற்று வரும் முகாமை மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜ் புதனன்று பார்வையிட்டு, பொதுமக்கள் கணினி மூலம் பதிவு செய்த கோரிக்கை மனுக்களுக்கான ஒப்புகை சீட்டுக்களை வழங்கினார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தெரி வித்தாவது, தமிழ்நாடு முதலமைச்சர் டிச.18 ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்டத்தில் ”மக்களுடன் முதல்வர்” திட்டத் தினை துவக்கி வைத்தார். திருப்பூர் மாவட்டத்தில் இத்திட் டத்தினை சிறப்பாக செயல்படுத்தும் பொருட்டு முதற்கட் டமாக அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் (மாந கராட்சி, நகராட்சி, பேரூராட்சி) வார்டு வாரியாக பொதுமக்க ளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற டிச.18 முதல் ஜன 5 ஆம் தேதி வரை 71 இடங்களில் முகாம்கள் நடைபெற உள்ளது. இந்த முகாம்களில் பொதுமக்களின் கோரிக்கைக ளுக்கு 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். இம்முகாம்கள் மூலம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தமிழ்நாடு மின்சார வாரியம். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, தொழிலாளர் நலன் மற்றம் திறன் மேம்பாட்டுத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரி மைத் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை, கூட்டு றவுத்துறை, காவல் துறை, மாவட்ட தொழில் மையம் ஆகிய துறைகளில் சார்பில் இம்முகாமின் மூலம் பொதுமக்கள் வழங் கும் கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காணப்படும். என தெரி வித்தார். இதையடுத்து, திருப்பூர் மாநகராட்சி, கோல்டன் நகர், சர்கார் நாயக்கர் மஹால் மற்றும் கெஜலட்சுமி தியேட்டர் ரோடு, குஜராத் மஹால் ஆகிய இடங்களில் ”மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் முகாமினை பார்வையிட்டு, பொதுமக்கள் கணினி மூலம் பதிவு செய்த கோரிக்கை மனுக்களுக்கான ஒப்புகை சீட்டுக்களை வழங்கி னார். இந்நிகழ்ச்சியில், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநி திகள் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் உடனிருந் தனர்.