districts

img

ஈரோடு மாநராட்சி ஆணையரிடம் சிஐடியு கேள்வி

ஈரோடு, ஆக.17- ஈரோடு மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படாத நிலையில், சிஐடியு நிர்வாகிகள் ஆணையாளரை சந்தித்து, மனு அளித்தனர்.  ஈரோடு மாநகராட்சியில், பணியாற்றும், தினக்கூலி  அடிப்படையில் பணியாற்றும் தூய்மைத் தொழிலாளர் களுக்கு 17 நாட்களாகாகியும் இதுவரை ஊதியம் வழங்கப் படவில்லை. இதனையடுத்து, சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ரமணியன், ஊரக வளர்ச்சி சங்கத்தின் செயலாளர் எஸ்.மாணிக்கம், ஜெகநாதன் உள்ளிட்டோர் மாநகராட்சி ஆணையாளர் பி.ஜானகியை அலுவலகத்தில் சந்தித்து தூய்மைப்பணியாளர்களுக்கு ஊதியம் வழங்காதது குறித்து  கேள்வி எழுப்பினர்.  இதற்கு பதிலளித்த அவர், இன்று வங்கியில் செலுத்தி யுள்ளோம், நாளை வந்துவிடும் என்றார். தனியார்மயத் திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட நாட்களுக்கும் ஊதியம் சேர்த்து வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு  பதிலளித்த ஆணையர், கோரிக்கை உரிய அதிகாரி களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல் பெற்று ஊதியம்  அளிக்கப்படும் என்றார்.  பணி ஓய்வு பெற்றவர்களுக்கு அளிக்கப்படும் பணப் பயன்கள் குறித்த கேள்விக்கு 2017ஆம் ஆண்டு முதலே நிலுவை உள்ளது. ரூ.3 கோடி தேவைப்படுகிறது. பட்டியல்  உள்ளது அதனை மீற முடியாது. வரிசையாக கொடுக்கப் படும் என்றார்.