districts

img

சுமைத் தொழிலாளர் கூலி உயர்வு பிரச்சனை: திருப்பூரில் சிஐடியு ஆர்ப்பாட்டம்

திருப்பூர், மார்ச் 3- திருப்பூரில் சுமை பணி தொழிலா ளர்களுக்கு கூலி உயர்வு வழங்க வலி யுறுத்தி சிஐடியு தலைமையில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் அரிசி கடை வீதியில் 50க்கும் மேற்பட்ட அரசி கடைகள் செயல்பட்டு வருகிறது. வெளி மாவட்ட, மற்ற மாநிலங்களில் இருந்து வரும் 5,10 மற்றும் 25 கிலோ எடை யுள்ள அரிசி மூட்டைகளை தொழிலா ளர்கள் லாரிகளில் ஏற்றியும், இறக்கி யும் வேலை செய்து வருகின்றனர். வரு டந்தோறும் விலைவாசி உயர்வுக்கு ஏற்றவாறு தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு அரிசி மண்டி உரிமையாளர் சங்கத்தினர் மூலம் ஒப்பந்தமாக நிறை வேற்றப்பட்டு வழங்கப்பட்டு வருகி றது. இந்த ஆண்டு விலைவாசி உயர் வுக்கு ஏற்றவாறு புதிய சம்பள ஒப்பந் தத்தை ஏற்படுத்தி காலம் தாழ்த்தாது கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட சுமைப்பணி தொழி லாளர் சங்கத்தினர் மொத்த அரிசி  மண்டி உரிமையாளர் சங்கம் முன்பாக  வியாழனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட தலைவர் கே. உன்னி கிருஷ்ணன், மாவட்ட செயலாளர் கே. ரங்கராஜ், நிர்வாகிகள் எம்.ராஜகோ பால், சதாசிவம், சி.மூர்த்தி, பி.பாலன் உள்பட திரளான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.