districts

img

ராசிபுரம் அருகே சிஐடியு நூதன போராட்டம் - அதிகாரிகள் வாக்குறுதி

நாமக்கல், மே 5- ராசிபுரம் அருகே ரிக் வண்டி தொழிலாளியின் லைசென்ஸை மீட்டுத்தரக்கோரியும், அதுதொடர் பாக உரிய நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்தும் சிஐ டியு  மோட்டார் இன்ஜினியரிங் தொழிலாளர் சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவ லகம் அருகில் எஸ்.ஆர்.வி கார்ட னில் குடியிருப்பவர் சண்முகா. இவரிடம் ரிக் வண்டியில் ஓட்டு நராக எலச்சிபாளையத்தைச் சேர்ந்த செங்கோடன் என்பவர் கடந்த 2021 நவம்பர் மாதம் வேலைக்குச் சேர்ந்தார். அப் போது, அவரின் ஓட்டுநர் உரி மத்தை பெற்றுக் கொண்ட சண் முகா, அதை திரும்ப ஓட்டுநரிடம் வழங்க மறுத்துள்ளார். இதுதொடர் பாக காவல்துறையினரிடம் பல முறை புகார் அளித்தும், முறை யிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, சிஐடியு  நாமக் கல் மாவட்ட மோட்டார் இன்ஜி னியரிங் தொழிலாளர் சங்கம் சார்பில் நூதன போராட்டம் அறி விக்கப்பட்டது. இதன்படி எலச்சி பாளையம் பேருந்து நிறுத்தத்தில் துவங்கி குருசாமிபாளையம், ராசிபுரம் வரை ஓட்டுநர் மற்றும் அவரது குடும்பத்தை காப்பாற்றிட உதவிடக்கோரி பிச்சை எடுக்கும் போராட்டம் துவங்கி நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது. ஆண்ட லூர் கேட் புதூர் மில் அருகில் சென்றபோது, வட்டாட்சியர் தங் கம், ராசிபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் செந்தில் குமார், காவல் ஆய்வாளர் சுகவ னம் ஆகியோர் பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண்பதாக எழுத்துப்பூர்வமாக உறுதியளித்த னர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. முன்னதாக, இப்போராட் டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி, சிஐடியு மாவட்ட செயலாளர் ந.வேலுசாமி, மோட் டார் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சுரேஷ், மாவட்ட தலைவர் பழனிவேல், மாவட்ட பொருளாளர் காளியப்பன் மற்றும் சிபிஎம் எலச்சிபாளையம் ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், மாவட்ட குழு உறுப்பினர் பழனி யம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.