districts

img

தொழிலாளர்களை, விவசாயிகளை வஞ்சிக்கும் ஒன்றிய மோடி அரசு

கோவை, பிப்.16- ஒன்றிய மோடி அரசின் தொழி லாளர் விரோத நடவடிக்கை களை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள், விவசாய சங் கங்களின் கூட்டமைப்பு சார்பில் நாடு தழுவிய போராட்டத்தின் ஒரு பகுதியாக தமிழகத்திலும் எழுச் சிமிகு போராட்டங்கள் நடை பெற்றது. இதில், பல்லாயிரக்க ணக்கானோர் பங்கேற்று ஒன்றிய  மோடி அரசுக்கு எதிரான ஆவேச  முழக்கங்களை எழுப்பி போராட் டங்களில் ஈடுபட்டனர்.  உணவு, மருந்துகள், வேளாண் இடுபொருட்கள் உள் ளிட்டவற்றின் மீதான ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும். பெட் ரோல், டீசல், சமையல் சிலிண்டர்  விலையைக் குறைக்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயி ரம் வழங்க வேண்டும். குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். போராடிப் பெற்ற 44 தொழிலாளர் சட்டங் களை 4 தொகுப்புகளாக மாற்றி யதைக் கைவிட வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை நிறுத்த வேண்டும். விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரைப்படி நிறைவேற்ற வேண்டும்.

100 நாள் வேலை திட்டத்தை 200  நாட்களாக உயர்த்தி நாளொன் றுக்கு ரூ.600 ஊதியம் வழங்க  வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி, தொழிலாளர் கள், விவசாயிகள் வெள்ளியன்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.  இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சூலூர், பொள்ளாச்சி, வால்பாறை, மேட்டுப்பாளையம் என 5 இடங் களில் சிஐடியு உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாயிகள் சார்பில் பொது வேலை நிறுத்தம் மற்றும்  மறியல் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஆட்சியர்  அலுவலகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சிஐடியு  மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ் ணமூர்த்தி தலைமை ஏற்றார். இதில், சிஐடியு மாநிலத் துணைத்  தலைவர் எம்.சந்திரன், மாவட்டப்  பொருளாளர் ஆர்.வேலுசாமி, ஏஐடியுசி மாநிலப் பொருளாளர் எம்.ஆறுமுகம், மாவட்டச் செய லாளர் தங்கவேல், எச்எம்எஸ் மாநிலச் செயலாளர் ராஜாமணி, எல்பிஎப் தமிழ்ச்செல்வன், ஏஐ சிசிடியு வெங்கடாச்சலம், எம்.எல்.எப் மு.தியாகராஜன், எஸ்டி டியு ஷாஜகான் உள்ளிட்ட நான் காயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். போராட்டத்தை வாழ்த்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன் உரை யாற்றினார்.  இதேபோன்று மேட்டுபாளை யத்தில் நடைபெற்ற போராட்டத் திற்கு சிபிஎம் தாலுகாச் செயலா ளர் கனகராஜ் தலைமை ஏற்றார்.  ஏஐடியுசி செல்வம், எல்பிஎப்  ராமசாமி, சிஐடியு இன்ஜினியரிங்  சங்க பொருளாளர் ஏ.ஜி.சுப்பி ரமணியம் உள்ளிட்ட தலை வர்கள் பங்கேற்றனர். சூலூரில் நடைபெற்ற மறியல்  போராட்டத்திற்கு, ஏஐடியுசி சுப்பி ரமணி தலைமை ஏற்றார். இதில் சிஐடியு மாவட்டத் தலைவர்  கே.மனோகரன், விவசாய சங்கம்  ரவீந்திரன், மின் ஊழியர் மத்திய அமைப்பு மண்டலச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட திரளானோர் ஒன்றிய அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பி  மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு  கைதாகினர்.

எஸ் மனோகரன் தலைமை ஏற்றார். இதில், சிஐ டியு பரமசிவம், விவசாய சங்கம்  வி.ஆர்.பழனிச்சாமி, விதொச துரைசாமி, மகாலிங்கம், ஏஐடியுசி வக்கில் சுப்பிரமணியம் உள்ளிட்ட திரளானோர் பங்கேற் றனர்.  வால்பாறையில் சிஐடியு பரமசிவம் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் மத்திய  தொழிற்சங்கங்கள் மற்றும் விவ சாயிகள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று கைதாகினர்.

நீலகிரி

நீலகிரி மாவட்டம். உதகை ஏடிசி திடல் மற்றும் பந்தலூர் பஜாரில் நடைபெற்ற ஒன்றிய மோடி அரசுக்கு எதிரான போராட்டத்தில், சிஐடியு மாவட் டச் செயலாளர் சி.வினோத். எல்.பி.எப் கவுன்சில் செயலர் ஜெயராமன், ஏஐடியுசி போஜரா ஜன், சிஐடியு மாவட்டப் பொருளா ளர் நவீன் சந்திரன், சிஐடியு மாவட்டகுழு உறுப்பினர் ராஜன்,  எல்.பி.எப் மாவட்ட துணைச் செய லாளர் மாடசாமி, ஏஐகேஎஸ் மாவட்டச் செயலாளர் யோகண் ணன், அஷாவர்கர் மாவட்டத் தலைவர் ஜீவரேகா உள்ளிட்ட  ஏராளமானோர் கலந்துக் கொண்டு, ஒன்றிய அரசுக்கு  எதிராக கண்டன முழக்கமிட்ட னர்.

ஈரோடு

இதேபோன்று, ஈரோடு மாவட் டத்தில், ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து ஈரோட்டில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும்  ஐக்கிய விவசாயிகள் முன்னணியும் இணைந்த வேலை நிறுத்தம் மற்றும் மறிய லில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டத்தில் வேலை  நிறுத்தமும், காளை மாடு சிலை  அருகில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சிஐடியு மாவட் டத் தலைவர் எஸ்.சுப்ரமணியன் தலைமை ஏற்றார். இதில், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஏ.அமிர்லிங்கம், சிஐ டியு மாவட்டச் செயலாளர் எச்.ஸ்ரீராம், எல்பிஎப் கோபால், ஏஐ டியுசி சின்னுசாமி, எச்எம்எஸ் சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து  கொண்டனர். காளை மாட்டு சிலை  அருகிலிருந்து ரயில் நிலையம் நோக்கி ஊர்வலமாகச் செல்ல முயன்ற போராட்டக்குழுவினரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதேபோல அந்தியூர் தாலுகா, கள்ளிமடைக்குட்டை பால் சொசைட்டி முன் தவிச தாலு காப்  பொருளாளர் ஆர்.கணே சன் தலைமையில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இதில் தவிச  மாவட்ட தலைவர் எஸ்.வி.மாரி முத்து, சிபிஎம் தாலுகாச் செய லாளர் ஆர்.முருகேசன், எஸ். துரைசாமி, ராசு (எ) தவசியப் பன், எஸ்.ஆர்.வெங்கடாசலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். சத்தியமங்கலம், புது வட வள்ளியில் பி.ஆனந்தன் தலை மையிலும், வடக்குப்பேட்டை யில் பி.கணேஷ் தலைமை யிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் கே.எம்.விஜயகுமார், பி.வாசுதேவன், வி.கே.திருத்த ணிகாசலம், மாற்று திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் சகா தேவன், எஸ்.ஏ.ராம்தாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.   கோபி மற்றும் நம்பியூரில் நடைபெற்ற போராட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் ஏ.எம்.முனுசாமி, மாவட்டத் தலை வர் எஸ்.முத்துசாமி, கரும்பு விவ சாயிகள் சங்க நிர்வாகி கார்த்தி கேயன், ஒய்வு பெற்றோர் நலச் சங்க நிர்வாகி எம்கே.நடராஜன், மாதர் சங்க நிர்வாகி மல்லிகா என பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று, நாடுதழுவிய பொது வேலை நிறுத்தத்தை ஆதரித்து வருமான வரித்துறை ஊழியர் கூட்டமைப்பினர் புதிய பென்சன் திட்டத்தைக் கைவிட்டு, பழைய பென்சன் திட்டத்தை அமுலாக்க வேண்டும். 8ஆவது மத்திய ஊதியக்குழுவை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளைத்  தலைவர் கட்டூரி அபிஷேக் தலைமை வகித்தார். சரகச்  செயலாளர் மேபிள் கோரிக்கை களை விளக்கி பேசினார். அலுவலர்கள் மற்றும் ஊழியர் கள் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினர்.