districts

img

தேசிய நுகர்வோர் தின விழா கொண்டாட்டம்

நாமக்கல், டிச.21- நாமக்கல் மாவட்டம் நுகர்வோர் பாதுகாப்பில் முன்மாதிரியாக திகழ வேண் டும் என நீதிபதி வலியுறுத்தி யுள்ளார்.  நாமக்கல் மாவட்ட நுகர் வோர் நீதிமன்றத்தில் தேசிய  நுகர்வோர் தின விழா நடை பெற்றது. நீதிபதி டாக்டர் வீ.ராமராஜ் தலைமையில் நடைபெற்ற விழாவில், ஆணைய உறுப்பினர் ஆர்.ரமோலா முன் னிலை வகித்தார். பார் கவுன்சில் உறுப்பி னரும் நாமக்கல் குற்றவியல் வழக்கறி ஞர்கள் சங்கத்தின் தலைவருமான ஆர்.அய்யாவு, நாமக்கல் சிவில் வழக்கறிஞர் கள் சங்கத்தின் தலைவர் டி. மோகன்ராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதைத்தொடர்ந்து, நீதிபதி டாக்டர்  வீ. ராமராஜ் பேசுகையில், ஒவ்வொரு ஆண் டும் டிசம்பர் 24 ஆம் தேதியை தேசிய நுகர் வோர் தினமாக கொண்டாடி வருகிறோம். அனைத்து தரப்பு மக்களுக்கும் நுகர்வோர் பாதுகாப்பு மிகவும் அவசியமானது. இதற்கு,  நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், நுகர்வோர் நீதிமன்றங்கள் குறித்த விழிப்புணர்வு பொது  மக்களிடையே வளர வேண்டும். நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் அனைத்தும், வரும் மார்ச்  மாத இறுதிக்குள் தீர்வுகாண நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதிய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டப்படி சுமார் 100 வகையான வழக்குகளையும் மனுக்களையும் நுகர்வோர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம். இதுகுறித்த பயிற் சியை வழக்கறிஞர்கள் சங்கங்கள் இளம் வழக்கறிஞர்களுக்கு வழங்க வேண்டும் என  நீதிபதி கேட்டுக்கொண்டார்.