உதகை, பிப்.9- உதகை அருகே கடநாடு பகுதி யில் 15 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி புலி நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம், உதகை அருகேயுள்ள கடநாடு கிராமத்தில் கடந்த சில நாட்களாக வனத்தை ஒட்டியுள்ள பகுதியில் புலி நட மாட்டம் இருந்து வருகிறது. பட்டப் பகலில் புலி நடமாடியதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் சிலர், அதனை வீடியோ எடுத்துள்ளனர். புலி நடமாட்டம் தொடர்பான தக வலை தொடர்ந்து வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு கண் காணித்து வருகின்றனர். முதுமலை புலிகள் காப்பகத்திலிருந்து இடம் பெயர்ந்து வந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ள னர். இந்நிலையில், நீலகிரி மாவட்ட வன அலுவலர் போஸ்லே சச்சின் துக்கராம், கடநாடு காவிலோரை கிராம பகுதிகளில் புலி நடமாட்டம் குறித்து ஆய்வு செய்து, அந்த பகுதி பொதுமக்களுடன் கலந் துரையாடினார். இதைத்தொடர்ந்து புலி நடமாட்டத்தை கண்காணிக்கும் பொருட்டு கடநாடு மற்றும் காவி லோரை பகுதிகளில் 15 நவீன கண் காணிப்பு கேமராக்கள் பொருத்தப் பட்டு கண்காணிப்பு பணி தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் இரவு நேரங்களில் நடமாட வேண் டாம் என வனத்துறை எச்சரித்துள் ளது. இதுகுறித்து மாவட்ட வன அலு வலர் போஸ்லே சச்சின் துக்கராம் கூறுகையில், காவிலோரை, கட நாடு பகுதியில் ஒரு வாரமாக புலி நடமாட்டம் இருப்பதாக கூறப்பட்ட தைத்தொடர்ந்து அதனை கண்கா ணிக்க 15 கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளன. ஒரு குழு அமைத்து கண் காணிப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளது. கேமராவில் பதிவாகும் படத்தை கொண்டு புலியின் வயது, எங்கிருந்து வந்துள்ளது என்பது தெரியவரும். மேலும், மாலை நேரங் களில் பொதுமக்கள் தனியாக நட மாடுவதை தவிர்க்க வேண்டும். புலி நடமாட்டத்தை பார்த்தால் உடனடி யாக தகவல் தெரிவிக்க வேண்டும், என்றார்.