உடுமலை, செப்.3- ஆமை வேகத்தில் உடுமலை பேருந்து நிலைய விரிவாக்கப் பணி கள் நடைபெறுவதாக பொது மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். உடுமலை மத்திய பேருந்து நிலையம் நகர மைய பகுதியான கோவை – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ளது. இந்த பேருந்து நிலையம் கடந்த 1964ஆம் ஆண்டு கட்டப் பட்டு, பின்னர் 1996ஆம் ஆண்டு விரிவாக்கம் செய்யப்பட்டது. இந் நிலையில், விரிவாக்கம் செய்யப் பட்டு பல ஆண்டுகள் கடந்த நிலை யில், தற்போது பயணிகள் மற்றும் பேருந்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்ததால் பேருந்து நிலையத் தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. உடுமலை பேருந்து நிலையத் திற்கு தினந்தோறும் 300க்கும் மேற் பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன. மேலும், அண்டைய மாநிலமான கேரளாவில் இருந்து, உடுமலை நகர பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி யில் பயிலும் மாணவர்கள், திருப்பூர் மற்றும் கோவை போன்ற பகுதிகளுக்கு வேலைக்கு செல் பவர்கள் மற்றும் கிராமப்புறங் களில் இருந்து வாரந்தோறும் திங்களன்று நடைபெறும் வார சந்தைக்கு விவசாயிகள் வந்து செல்கின்றனர். இதனால் உடு மலை பேருந்து நிலையத்தில் எப் போதும் கூட்ட நெரிசலால் பயணி கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வரு கின்றனர். மேலும், பேருந்து நிலையத்தின் உள்ளே கோவை, பொள்ளாச்சி பேருந்துகள் நிறுத்தப்படும் குறுக லான பகுதியில் தான், கிராமங் களுக்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தப்படுகிறது. மேலும், திருப்பூர் பேருந்துகள் பேருந்து நிலையத்தை விட்டு வெளியே வரும் போது, பழனி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படு கிறது. எந்த பகுதிகளுக்கு எந்த பேருந்துகள் செல்லும் என்று குழப்பத்தை ஏற்படுத்தும் வகை யில் தான் உடுமலை பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இதனால் குறுகலான பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்து, கிராமப்புற பேருந்துகள் தனியாக நிற்கவும், நகர்ப்புற பேருந்துகள் நிற்க தனித் தனியாக பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக பொதுமக்களால் கோரிக்கை வைக்கப்பட்டது.
பொதுமக்களின் கோரிக் கையை ஏற்று கடந்த 2001ஆம் ஆண்டு பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய பேருந்து நிலையத்தின் அருகில் இருந்த வி.பி.புரம் பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகள் அன்றைய நகர தலைவர் வேலுச்சாமியின் முயற்சி யால் அகற்றப்பட்டு, அந்த இடத் தில் கடந்த பல மாதங்களுக்கு மேலாக பேருந்து நிலைய விரி வாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இது குறித்து பொது மக்களிடம் கேட்ட போது, பேருந்து நிலைய விரிவாக்கம் பணி தொடங்கி பல மாதங்களுக்கு மேலாகி விட்டது. ஆனால், இன்று வரை பணிகள் முடிவுக்கு வராமல் இருப்பது வேதனையாக உள்ளது. இந்த பேருந்து நிலையம் பழனி தேசிய நெடுஞ்சாலை மற்றும் உடுமலை புறவழிச் சாலையில் அமைந்து உள்ளதால் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே செல்ல சுரங்கப் பாதை அமைக்க வேண்டும். குடி நீர் தொட்டி பெயரளவில் மட்டுமே உள்ளது. எனவே, அனைவரும் பயன்படுத்தும் வகையில் சுத்த மான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல் பேருந்து நிலையத்தை ஆங் காங்கே குப்பைகள் தேங்கி உள்ளது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் உள்ளூர் மற்றும் வெளியூர் பேருந்துகள் தனித்தனியாக நிற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்கள். எனவே, பயணிகள் நலன் கருதி நடவடிக்கை பேருந்து நிலைய விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க திட்ட அதிகாரிகள் நடவ டிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள் ளனர்.