districts

img

கருகிய தென்னை: நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

திருப்பூர், அக்.20- திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதிக ளில் போதுமான மழை இல்லாததால் தென்னை மரங்கள் காய்ந்து கருகி உள்ளது.  அரசு நிவாரணம் வழங்கினால் மட்டுமே  உயிரோடு உள்ள மரங்களைக் காப்பாற்ற  முடியும் என்று விவசாயிகள் தெரிவித்தனர். இதுகுறித்து தமிழ்நாடு தென்னை விவசா யிகள் சங்க மாநிலத் தலைவர் எஸ்.ஆர். மதுசூதனன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, திருப்பூர் மாவட்டத்தில் 7  ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் தென்னை பயிர்  செய்துள்ளனர். பரம்பிக்குளம் ஆழியார் திட்ட பாசனப்பகுதிகளிலும், பாசனம் இல் லாத பகுதிகளில் நிலத்தடி நீரை நம்பி பயிர்  செய்துள்ளனர். இந்நிலையில் இந்தாண்டு தென்மேற்கு பருவ மழை போதுமான அளவு  பெய்யாததால், கடுமையான வறட்சி ஏற்பட் டுள்ளது. இதனால் போதுமான தண்ணீர் இன்றி ஆயிரக்கணக்கான மரங்கள் காய்ந்து  விட்டது. மேலும் இன்னும் சில நாட்களுக்கு  மழை பொழிவு கிடைக்காமல் போனால் பல் லாயிரம் தென்னை மரங்கள் அடியோடு காய்ந்து கருகி விடும். பரம்பிக்குளம் ஆழி யார் திட்டத்தில் உள்ள தொகுப்பு அணை களில் தென்மேற்கு பருவமழை மிகக்கு றைந்த அளவே பெய்துள்ளதால், நான்காம் மண்டல பாசனத்திற்கு ஒரு சுற்றுத் தண்ணீர்  மட்டும் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த பகுதி யில் உள்ள தென்னைமரங்கள் மட்டும் சில  நாட்களுக்கு உயிரோடு இருக்கும். உடு மலை, தாராபுரம், மடத்துக்குளம், சூலூர் தாலுக்கா பகுதிகளில் உள்ள விவசாயிகள் ஒரு லோடுக்கு ரூ.4500 கொடுத்து தண்ணீர்  வாங்கி ஊற்றி வருகின்றனர். மேலும், ஒரு ஏக் கருக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம்  செலவு செய்து மரங்களின் உயிரைக் காப் பாற்ற முயன்று வருகின்றனர். வடகிழக்கு  பருவமழை உரிய நேரத்தில்  பெய்யவில்லை  என்றால் தென்னைமரங்கள் காய்ந்து கரு கும் நிலை ஏற்பட்டுள்ளது.  இதனால்   விவசாயி களுக்கு பெரும் இழப்பு ஏற்படும். எனவே நீண்ட கால பயிரான தென்னைக்கு உரிய இழப்பீடு கிடைக்க, பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் அனைத்து விவசாயிகளையும் இணைத்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தென்னை மரங்களிற்கும் காப்பீடு செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து துரிதமாகச் செயல்படுத்த வேண்டும். தென்னை காப்புறுதி திட்டமும் தற் பொழுது நிறுத்தப்பட்டுள்ள‌தால், வளர்ச்சி வாரியத்தை அணுகி விவசாயிகள் காப் பீடு திட்டத்தில் சேருவதற்கான வாய்ப்பு கள் இல்லாமலே போய்விடுகிறது. ‌ஆகவே  வேளாண்மைத் துறை தோட்டக்கலைத் துறை உட்பட்ட விவசாயம் சார்ந்த அனைத்து  துறைகளின் சார்பிலும் தென்னை பயிர் காப் பீட்டில்  பதிவு செய்திட துரித ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இதன் மூலம் எதிர் வரும் வறட்சியால் ஏற்படும் பாதிப்பிலிருந்து விவ சாயிகளை காப்பாற்ற முடியும். காப்பீட்டுத் தொகையாக ஒரு மரத்திற்கு ரூபாய் பத்தா யிரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  என கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாயி ரஞ்சித் கூறியதா வது, 2.5 ஏக்கருக்குத் தென்னை மரம் போட் டுள்ளேன். 160 மரங்கள் உள்ளது. இதில் போதுமான நீர் வரத்து இல்லாததால் 20 மரங் கள் காய்ந்துவிட்டது. 100 மரத்தில் பூ, காய்  என்று எதுவும் இல்லை. இந்த மரங்களி லிருந்து வருமானம் வர இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும். ஐந்து மாதங்களாக மழை  இல்லாததால் போரில் தண்ணீர் இல்லை.

4  மாதமாக ரூ.20 ஆயிரத்திற்குத் தண்ணீர் வாங்கி தண்ணீர் ஊற்றினேன். கட்டுப்படி ஆக வில்லை. இதனால் ஒரு வருமானமும் இல்லை. முதல் அமைச்சர் தனிப்பிரிவுக்கு இதுகுறித்து மனு அளித்தும் எந்த பதிலும்  வரவில்லை. அரசு உடனடியாக நடவ டிக்கை எடுக்க வேண்டும். காய்ந்த போன மரங்களுக்கு நிவாரணம் வழங்கினால் மட்டுமே உயிரோடு உள்ள மரங்களை காப் பாற்ற முடியும் என்றார். இதுகுறித்து விவசாயி சுப்பிரமணி கூறு கையில், எனக்கு 5 ஏக்கரில் 350 தென்னை மரங் கள் உள்ளது. மழை இல்லை. போதுமான நீர்  இல்லாததால் தென்னை மரங்கள் காயும் நிலை ஏற்பட்டது. மாதத்திற்கு இரு முறை லோடு தண்ணீர் வாங்கி ஊற்றியதால் தென்னை மரங்கள் தப்பித்தது. இது வரை ரூ.50 ஆயிரம் வரை தண்ணீர் வாங்கி ஊற்றி  உள்ளேன். ஆனால் வருமானம் ஏதும் இல்லை. வருமானம் வருவதற்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிடும். பக்கத்து தோட்டத்தில் ஒன்றரை ஏக்கரில் 120 மரங் கள் இருந்தன. சென்ற மாதம் 10 மரங்கள் கருகி  விட்டது. இப்போது 4 மரங்கள் கருகும் நிலை யில் உள்ளது. ஏதோ இடையில் மழை பெய்த தால் மரங்கள் தப்பித்தது. இந்த மரங்க ளிலிருந்து வருமானம் கிடைக்க இன்னும்  3 ஆண்டுகள் ஆகிவிடும். அரசு காய்ந்த  மரங்களுக்கு ஏற்ப நிவாரணம் வழங்கி னால் மட்டுமே இப்பகுதிகளில் தென்னை விவ சாயத்தை காப்பாற்ற முடியும் என்று தெரி வித்தார்.