districts

img

தூய்மைப்பணியாளர்களுக்கான குடியிருப்புகளை விரைந்து கட்டிக்கொடு

கோவை, ஜூலை 29- உக்கடம், சிஎம்சி காலனி யில் வசிக்கும் தூய்மைப் பணியா ளர்களுக்கு, ஏற்கனவே மாநக ராட்சி அளித்த உறுதி மொழியின் படி உடனடியாக குடியிருப்புகளை கட்டிக்கொடுக்க வலியுறுத்தி அனைத்து கட்சியினர் திங்களன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  கோவை மாவட்டம், உக்கடம் சி. எம்.சி.காலனியில் வசித்து தூய்மை பணி செய்து வரும் பட்டியலின மக் கள் சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக 1000 குடும்பங்கள் வரை வசித்து வந்தனர். கடந்த 2019 ஆம் ஆண்டு உக்கடம் முதல் ஆத்துப்பா லம் வரை மேம்பாலம் அமைக்கும் பொருட்டு, தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் குடியிருந்து வரும் குடியிருப்பு களை அகற்ற வேண்டும் என்றும், மேம்பாலம் கட்டும் பணி முடிவ டைந்தவுடன், அங்குள்ள மீன் மார்க் கெட்டை அகற்றிவிட்டு, அதே இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கள் கட்டப்பட்டு சுமார் 520 பயனாளிகளுக்கு வழங்கப்ப டும், அதுவரையில் தற்காலிக குடியிருப்புகள் அமைத்துத்தரப் படும் என அதிகாரிகள் உறுதியளித் தனர். இதனையேற்று 100 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வந்த தூய்மைப்ணியா ளர்கள் குடியிருப்புகள் அகற்றப்பட் டன.

ஆனால், அதன் பின்பு 520 குடும் பங்களுக்கும் தற்காலிக குடியிருப் புகள் கட்டித்தரப்படவில்லை, சுமார் 260 குடும்பங்களுக்கு மட் டுமே, கோவை மாவட்டம், புல்லுக் கட்டு பகுதியில் 10க்கு 10 எனும் அள வில் மட்டுமே தகரத்திலான கூரை விடுகள் அமைத்துத் தரப்பட்டன. இதிலும், எந்த விதமான அடிப் படை வசதிகளும் செய்து தரப்பட வில்லை. தமிழ்நாடு நகர்புற வாழ் விட மேம்பாட்டு வாரியத்தால் 18 மாதங்களில் அதே இடத்தில் குடியி ருப்புகள் கட்டி முடிக்பட்டு பயனாளி களுக்கு வழங்கப்படும் என்று கூறிய நிலையில், தற்போது 4 ஆண்டுகளுக்கும் மேலாக ஆன பின்பும் குடியிருப்புகளுக்கான கட்டுமானப் பணிகள் தொடங்காம லேயே இருக்கிறது. ஆகவே தூய் மைப்பணி செய்து மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள தாழ்த்தப்பட்ட பட்டியலின சமுதாயத்தைச் சார்ந்த அவர்களுக்கு அதே இடத் தில் 520 பயனாளிகளுக்கும் குடியி ருப்புகள் கட்டி முடித்து உடனடி யாக வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  தமிழ்ப்புலிகள் கட்சி தலைமை யில், உக்கடம் வள்ளியம்மை பேக் கரி முன்பு திங்களன்று நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மூத்த தலைவரும்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பி.ஆர். நடராஜன், தபெதிக பொதுச் ்செயலாளர் கு.ராமகிருட்டிணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சிவசாமி, தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் தலைவர் யு.கே.சிவஞா னம், தமிழ் புலிகள் கட்சியின் தலை வர் நாகை. திருவள்ளுவன், மனித நேய மக்கள் கட்சியின் பேராசிரியர் ஜவாஹிருல்லா, விடுதலை சிறுத் தைகள் கட்சியின் ம.செ. சிந்தனைச் செல்வன், திராவிட தமிழர் கட்சியின் தலைவர் சி.வெண்மணி, உள்ளிட் டோர் கண்டன உரையாற்றினர்‌. இதில், ஏராளாமானோர் கலந்து கொண்டனர்.