தருமபுரி, ஏப்.24- தருமபுரி அருகே உள்ள வெங்கட்டம்பட்டி ஊர்ப்புற நூலகத்தில் தமிழ்நாடு அரசு பொது நூலக இயக்கம் சார்பில் உலக புத்தக தினவிழா கண்காட்சி நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், வெங்கட்டம்பட்டி ஊர்ப்புற நூல கத்தில் உலக புத்தக தினவிழா கண்காட்சி நடைபெற்றது. இதனை மாதேமங்கலம் ஊராட்சி தலைவர் சங்கர் தொடங்கி வைத்தார். புத்தக தினவிழாவையெட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இந்த மாதத்தில் 21 புரவலர்கள் தலா ரூ.1001 செலுத்தி நூலகத்தில் இணைந்து கொண்டனர். இதில், 13 பேர் மாணவ, மாணவிகளாவார்கள். நிறைவாக ஊர்ப்புற நூலகர் சரவணகுமார் நன்றி கூறி னார்.