கோவை, செப்.6- இந்தியா கூட்டணியை பார்த்து ஆளுங்கட்சியான பாஜக பயம் வந்திருப்பதால், மத ரீதியாக காழ்ப் புணர்ச்சியை உருவாக்குகிறார் கள் என கோவையில் துரை வைகோ செய்தியாளர்களிடம் தெரிவித் தார். கோவை மண்டல நிர்வாகிகள் ஆலோ சனைக் கூட்டம் சித்தாபுதூரில் உள்ள மதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கட்சி யின் முதன்மை செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டார். இதன்பின் செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது, சனாதனம் கலாச்சாரம் வேறு, இந்து மதம் என்பது வேறு. திராவிடர்களும், திராவிட இயக்கங்களும் இந்து மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல. மக்க ளிடம் பிரிவினை உருவாக்கும் வகையில் சாதிகளை உருவாக்கினார்கள். பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞர் உள்ளிட் டோர் போராடியது இந்து மதத்திற்கு எதிராக அல்ல. வட நாட்டில் 48 மணி நேரமாக உதய நிதி ஸ்டாலின் பேசியதை திரித்து, திரா விட இயக்கங்கள் இந்துகளுக்கு எதிரி போல சித்தரித்து வருகிறார்கள். நாடாளு மன்ற தேர்தல் வருவதால் ஒன்றிய அரசின் குறைகளை மறைக்கவும், திசை திருப்ப வும் இதை செய்கிறார்கள். எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணியை பார்த்து ஆளுங்கட்சிக்கு பயம் வந்தி ருப்பதால், மத ரீதியாக காழ்ப்பு ணர்ச்சியை உருவாக்க பார்க்கி றார்கள். ஒரு சாமியார் உதயநிதி கழுத்தை சீவுவேன் என தலிபான் போல சொல்கிறார். ஆப்கானிஸ் தானில் தலிபான்கள் பெண்கள் படிக்க கூடாது, மாற்று கருத்து சொன்னால் கழுத்தை அறுப்பேன் என சொல் கிறார்கள். அதே கருத்து தான் ஆர்.எஸ்.எஸ். கருத்து. இது தான் சனாதனம். மதம், சாதி வைத்து அரசியல் செய்யக்கூடாது. விவாதம் இருக்கலாம். ஆனால் வன்முறை இருக்க க் கூடாது. இந்து மதத்தை பின்பற்றுபவர்க ளுக்கு திமுக, இந்தியா கூட்டணியினர் எதி ரானவர்கள் என்ற கருத்தை உருவாக்க பார்க் கிறார்கள். நாட்டில் பல பிரச்சனைகள் இருக்கும் போது பாரத் என்கிற பெயர் மாற்றம் இப் போது தேவையா? இது தேவையில்லாத சர்ச்சை. வேற்றுமையில் ஒற்றுமை தான் இந்தியாவின் அடித்தளம். ஆங்கிலேயர் காலத்திற்கு முன்பே இந்தியா என்ற பெயர் வந்து விட்டது. ஆர்பிஐ, பிசிசிஐ பெயர்களை யும் மாற்றுவார்களா? இது தேவையில்லாத குழப்பம்”. என்றார்.