உதகை, டிச.9- புயல் பாதிப்பு காரணமாக, உதகையில் கடுங் குளிர் நிலவுவ தால் மக்கள் பெரும் அவதி அடைந் தனர். தென்மேற்கு வங்க கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுவடைந்தது. “மாண்டஸ்” என பெயர் சூட்டப் பட்டுள்ள இந்த புயல் சனியன்று (இன்று) கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக கடலோரப் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், தமிழ கத்தின் வட கடலோர மாவட்டங் களில் மிக முதல் அதிக கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் 20க்கும் மேற் பட்ட மாவட்டங்களில் கல்வி நிறுவ னங்களுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திலும் வெள்ளியன்று அதி காலை முதல் கடும் பனிமூட்டமும் குளிரும் நிலவியது. இதோடு நாள் முழுவதும் லேசான சாரல் மழை பெய்து வந்தது. நீலகிரி மாவட்டத்தில் வெள்ளி யன்று அதிகபட்சமாக 20 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 9 டிகிரி செல்சியசும் காலநிலை பதிவா னது. மேலும், காற்றில் ஈரப்பதத்தின் அளவு 73 சதவிகிதம் இருந்தது. இந்த கடுங்குளிர் காரணமாக அன்றாட வேலைகளை கவனிக்க முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்தனர். மேலும் பள்ளிக்கு சென்ற மாணவர்கள் குளிர் காரண மாக திண்டாடினர். அவர்கள் கூடுத லாக கம்பளி ஆடைகள் மற்றும் ரெயின் கோட் அணிந்து சென்றனர். சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து வெறிச்சோடி காணப்படுகிறது. இதேபோல் வாகன ஓட்டிகள் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத தால் சிரமம் அடைந்தனர். மேலும், முகப்பு விளக்குகளை எரிய விட்ட படி சென்றனர். இதற்கு இடையே கடுங் குளிர் காரணமாக செடிகள் கருகுவதால் விவசாயிகள் கவலை யடைந்துள்ளனர். பயிர்களை பாது காக்க தேவையான மாற்று ஏற்பாடு களை தீவிரமாக மேற்கொண்டு வரு கின்றனர். கடும் குளிர் காரணமாக உதகை மாவட்ட மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.