districts

img

உடுமலை நாராயணகவியின் பிறந்த நாள் விழா

திருப்பூர், செப்.25- பகுத்தறிவுக் கவிராயர் உடுமலை நாராயணகவியின் பிறந்த நாளை முன்னிட்டு புதனன்று உடு மலை வட்டத்தில் பகுத்தறிவுக் கவி ராயர் உடுமலை நாராயணகவி நினைவு மண்டபத்தில் உள்ள  திருவுருவச் சிலைக்கு பொள்ளாச்சி  நாடாளுமன்ற உறுப்பினர் க.ஈஸ்வர சாமி மாலை அணிவித்து மலர் தூவி  மரியாதை செலுத்தினார்.  திருப்பூர் மாவட்டம், உடுமலைப் பேட்டை வட்டம் பூளவாடி கிரா மத்தில் கிருஷ்ணசாமி செட்டியார், முத்தம்மாள் தம்பதியினருக்கு 1899 செப்.25 அன்று நாராயணகவி மக னாக பிறந்தார். பொது உடமை, சமத் துவம், பெண் விடுதலை, சுயமரி யாதை போன்ற முற்போக்கு சிந்த னைகளை பெரியாரிடம் கற்ற றிந்தார். விடுதலை போராட்டத் தின்போது, தேசிய உணர்வு மிக்க  பாடல்களை எழுதி மேடை தோறும்  முழுங்கியவர். இவரது பாடல்களில்  கண்ணகி, மகாமாயா, கிருஷ்ண பக்தி, வேலைக்காரி, சொர்க்கவா சல், பராசக்தி முதலான பல்வேறு திரைப்படங்களின் பாடல்கள் மிக வும் புகழ் பெற்றவை இவர் தமது முதுமை காலத்தில் தனது சொந்த ஊரான பூளவாடி கிராமத்தில் 1981ல்  மே 23 அன்று காலமானார்.  பகுத்தறிவுக் கவிராயார் உடு மலை நாராயணகவி பிறந்தநாளை முன்னிட்டு உடுமலைப்பேட்டை குட் டைதிடல் அருகில் அமைந்துள்ள பகுத்தறிவுக் கவிராயார் உடுமலை  நாராயணகவி நினைவு மண்டபத்தில் உள்ள உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.  பொள்ளாட்சி நாடாளுமன்ற உறுப்பினர் க.ஈஸ்வரசாமி, மாவட்ட  வருவாய் அலுவலர் க.கார்த்திகே யன் ஆகியோர் அவரது திருவு ருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அவரது வாரிசு தார்களுக்கு பொன்னாடை அணிவித் தனர். மேலும், பகுத்தறிவு கவிராயர் உடுமலை நாராயணகவியின் உருவு ருவப் படத்தை தத்துருவமாக வரைந்த காரத்தொழுவு அரசு மேல்நி லைப்பள்ளி ஓவிய ஆசிரியர் அ.கா ளிஸ்வரனை பாராட்டி சிறப்பு செய்த னர்.  இவ்விழாவில்,  உடுமலைப் பேட்டை வருவாய் கோட்டாட்சி யர் ஜஸ்வந்த் கண்ணன், உடுமலைப் பேட்டை நகர்மன்றத்தலைவர் மத்தின், செய்தி மக்கள் தொடர்பு அலு வலர் செ.கு.சதீஸ்குமார், உடும லைப்பேட்டை வட்டாட்சியர் சுந்தரம்,  அரசு அலுவலர்கள், பகுத்தறிவுக் கவிராயார் உடுமலை நாராயணகவி யின் வாரிசுதாரர்கள் மற்றும்  உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதி கள் கலந்து கொண்டனர்.