districts

img

பயாலாஜிகல் வார் - நாமும் தெரிந்துகொள்வோமே…

நமக்கு பயாலஜி ( BIOLOGY ) தெரியும்- ஆனால் மனிதனின் விஞ்ஞான அறிவு, போர்களிலும் நுழைந்து மனித- குலமே அழியும் அளவுக்கு வந்து விட்டது. ( ஹிரோஷிமா…… நினைவை கொண்டுவந்ததாக நினைக்க வேண்டாம் ) கத்தி- துப்பாக்கி – வெடிகுண்டு போய் ரத்தக் களரியாக்காமல் மனித ஜீவனில் நோயுண்டாக்கி உயிரைப் போக்குவதே – உயிர் வேதியியல் போர் எனப்படுகிறது. இந்த ஆயுதத்திற்குப் பயன்படுவது வைரஸும், பாக்டீரியாவும்தான். இதில் ஒன்றுதான் பேசில்லஸ் ஆந்த்ராக்ஸ் (BACILLUS ANTHRACS) என்கிற பாக்டீரியா. வேறுகிருமிகளாக வரியோலா வைரஸ், யெர்சினியா பெஸ்டிஸ், சல்மோனல்லா டைப் போன்றவைகளை மிஸ்சைல்ஸ் ( MISSILES ) மூலம் அனுப்பி எதிர் நாடுகளை நிலைகுலைய வைக்கலாம்.  இது இந்த நூற்றாண்டின் சாபக்கேடு! ஆந்த்ராக்ஸ் பாக்டீரியா தாக்கப்பட்டதும் சிகிச்சை எடுத்துக்கொண்டால் போதும். இந்திய விஞ்ஞானிகள் இதற்கு வீரியமான மருந்துகளைத் தயாரித்துள்ளனர். ஆனால் ஆந்த்ராக்ஸ் கிருமி கோழியைத் தாக்குவதில்லை. கால்நடைகளை மட்டுமே தாக்குகிறது. இது தொற்று நோயல்ல. ஆனால் ‘கிரிமினல்’ கள் பவுடர் மூலம் பரப்ப சுலமாக இதைப் பயன்படுத்துகின்றனர். A.C.S.மணி

அது  வரை

வேறு வழியில்லை...... 
இணையரிடம் 
அன்பு செலுத்துங்கள்
குழந்தைகளை கோபிக்காதீா்
வீட்டுப் பணிகளை பிாியுங்கள்

வேறு வழியில்லை..... 
கிடைப்பதை உண்ணுங்கள்
இருப்பதை நுகருங்கள்
கணினியில் கைப்பேசியில்
அதீத நேரம் தீங்கு
ஞாயிறு கவிதையில்
சொன்னால் தான் கேட்பீா்களா

வேறு வழியில்லை
புத்தகங்களை வாசியுங்கள்
மனிதர்களை நேசியுங்கள்
முடங்கத் தான் போகிறோம்
சில நாட்களுக்கு...... 

கே.லலிதா சென்னை