திருப்பூர், நவ.10- திருப்பூர் மாவட்டம், பல்லடம் ஒன்றி யம், பூமலூர் ஊராட்சி நிர்வாகத்தின் முறையான திட்டமிடல் இல்லாமல், மழைநீர் வடிகால் அமைக்காமல் சாலை அமைத்ததால் அந்த ஊராட்சி மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்ற னர். பூமலூர் ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளிபாளையம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வியாழனன்று இரவு பெய்த சிறு மழைக்கே மக்கள் தெருக்களில் நடமாட முடியாத நிலை மைக்கு ஆளாகியுள்ளனர். மழை நீர் வடிகாலுக்கும், தெரு வுக்கும் சுமார் இரண்டு அடிக்கு மேல் வித்தியாசம் உள்ளது. மழை நீர் வெளி யேறுவதற்கான எத்தகைய வாய்ப்பும் இல்லை, இப்படி எத்தகைய முன்யோச னையும் இல்லாமல் கடமைக்காக ரோடு போடுவது, சாக்கடை கட்டுவது உள்ளிட்ட பணிகளை செய்து மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. தற்போதும் சரி, கடந்த பத்தாண்டுக ளாகவும் சரி மக்களுடைய அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கு மழை நீர் வடிகால், கான்கிரீட் ரோடு கள் போன்ற அடிப்படை கட்டுமானங் கள் மக்களுக்கு பயன் அளிக்கும் வகை யில் செய்யப்படவில்லை. சாதாரண சிறுமழைக்கு ஏற்படும் பாதிப்பால் இது தெரிய வருகிறது. குறிப்பாக பள்ளி பாளையம் பஸ் நிறுத்தம் அருகிலும், ஏடி காலனியிலும் மழை தண்ணீர் குளம் போல் தேங்கி நின்று எந்த பக்கமும் மக்கள் செல்வதற்கு வாய்ப்பே இல்லாமல் உள்ளது. மேட்டுப்பாளையத்திலும் இதே போல் மழை தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. தற்போது இங்கு புதிதாக போடப்பட்ட ரோட்டை வெட்டி தான் இந்த தண்ணீரை வெளி யேற்ற வேண்டிய நிலைமை இருக்கி றது. எனவே சாலை போடுகிற பொழுது, மழை நீர் வடிகாலுக்கும் உகந்த முறையில் திட்டமிட்டு பணிகளை செய்து இருந்தால் இன்றைக்கு மக்கள் அவதிப்பட வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்காது. வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். ஊராட்சி மன்ற நிர்வாகம் உரிய முறையில் மக்கள் பயன்படக்கூடிய பணிகளை, அடிப்படை கட்டுமானங் களை திட்டமிட்டு செய்திட வேண்டும் என்று நடுவேலம்பாளையம் மக்கள் சார் பில் மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றிய செய லாளர் ஆர்.பரமசிவம் கூறினார்.