districts

img

பேத்தியை படிக்க வைக்க வேணும்… அரசின் உதவிக்கு ஏங்கும் மாற்றுத்திறனாளி பாவாயி

அரசின் உதவித்தொகை பெருவ தற்கான அனைத்து தகுதிகள் இருந் தும் தொடர்ந்து கோரிக்கை மனுக் களை மாவட்ட நிர்வாகம் ஏற்கமறுப்ப தால் கனவனை இழந்த மாற்றுத்திற னாளி பெண் பாவாயி தனது பேத் தியை படிக்கவைக்கனும் உதவி செய் யுங்கள் என அரசிடம் கெஞ்சிக்கொண் டிருக்கிறார். நாமக்கல் மாவட்டம் திருச்செங் கோடு அருகே உள்ளது  எலச்சிபாளை யம் ஒன்றியம். இங்குள்ள கோக்கலை கிராமத்தில் கருமாகவுண்டம்பாளை யம் அருந்ததியர் தெருவில் வசித்து வருகிறார் 65 வயதான பாவாயி. இவ ரது கனவர் சென்ராயன் கடந்த 5  வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார். இவரது மருமகன் பாலமுருகன் 13  வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார்.  இவரது மகள் அம்பிகாவும்  கடந்த  20 தினங்களுக்கு முன்பு நோய்வாய்ப் பட்டு இறந்துவிட்டார்.  ஐந்து வருடத்திற்கு முன்பு இரு கண்களும் பார்வை குறைபாடு ஏற்பட் டுள்ளது. அப்போது மருத்துவம் செய்ய வழிகாட்டுதல் இல்லாமல் இரு  கண்களும் தெரியாத நிலையில் தனது பேத்தியோடு வசித்து வருகிறார்.

கண்களை இழந்து, கணவனை இழந்து, மகளை, மருமகனையும் இழந்து பரிதவிக்கும்  மாற்றுத்திற னாளியான பாவாயிக்கு அரசின் உதவி இதுவரை கிடைக்கவில்லை. மாற்றுத்திறனாளி, விதவை, முதிய வர் என அரசின் திட்டத்தில் உதவித் தொகை பெருவதற்கான அனைத்து தகுதியும் இருந்தும் இதுவரை எந்த உதவியும் கிடைக்கப்பெறாமல் உள் ளார். இந்நிலையில் பாவாயின்  பேத்தி பரணிஸ்ரீக்கு (14) திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி யில்  அரசினர் விடுதியில் தங்கி படிக்க  அரசு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். கோக்கலை அரசு நடுநிலைப் பள் ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்து வந்தார் பேத்தி பரணிஸ்ரீ. ஊரில் உள் ளவர்கள் இவருக்கு உதவி செய்து  வந்தனர். இந்நிலையில் மேல்நிலைப் பள்ளியல் கல்வி தொடர்வதற்கு எந்த வருமானமும் இல்லாத நிலையில் அனைத்து உறவுகளையும் இழந்து பரிதவிக்கும் நிலையில் பேத்தியை எப்படியாவது படிக்க வைக்க வேண் டும் என புலம்பி வருகிறார். இதுகுறித்து பாவாயி கூறுகை யில், “அரசாங்கத்திடம் இருந்து ஓய் வூதியம் பெறுவதற்கு பலமுறை விண் ணப்பித்தும் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. கொடுக்கும் மனுக் களையெல்லாம் தள்ளுபடி செய்கின் றனர். அரசு விடுதியில் சேர்த்தி தனது பேத்தி பரணிஸ்ரீயை ஒன்பதாம் வகுப்பு  படிக்க வைக்கனும் சாமி. ஒரு வேளை  கஞ்சி குடிக்கவாவது அரசாங்கம் உதவி தொகை கொடுக்கனும்” என் றார்.