தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் நடைபெற்ற ஆட்சி மொழி கருத்தரங்கில், 2020 ஆம் ஆண்டில் சிறந்த வரைவுகள், குறிப்புகள் எழுதிய அரசு பணியாளர் களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வழங்கினார். இதில், தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குநர் புவனேஸ்வரி, அரசு கலைக்கல்லூரி முதல்வர் வி.கலைச்செல்வி உட்பட பலர் உடனிருந்தனர்.