திருப்பூர், மார்ச் 27- திருப்பூர் கல்லாங்காட்டில் அடிப்படை பிரச்சனைகளை சரி செய்து தர வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கல்லாங்காடு பகுதி யில் கடந்த சில நாட்களாக சாக்கடை தூர்வாரப்பட வில்லை. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவ தோடு தொற்று நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக பொது மக்கள் குற்றஞ்சாட்டினர். மேலும் இப்பகுதியில் நீண்ட காலமாக குண்டும், குழியுமாக உள்ள சாலைகளைச் செப்பனிட்டு சீர் செய்து தரவும் வலியுறுத்தி வந்தனர். இது தொடர்பாக மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு இப்பகுதி மக்கள் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் கடும் அதிருப்தி அடைந்த இப்பகுதி பொதுமக்கள் ஞாயிறன்று கல்லாங்காடு பிரதான சாலையில் வாகனங்களை மறித்து சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். இதனால் இப்பகுதியில் மினி பஸ் உள்ளிட்ட வாகனப் போக்குவரத்து பாதிப்படைந்தது. தக வல் அறிந்து காவல் துறையினரும், மாநகராட்சி அதிகாரி களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சாக்கடை கால்வாய் தூர்வாருவதற்கு உடனடி நட வடிக்கை எடுப்பதாகவும், இதர பணிகள் தொடர்பாக உரிய கவனம் செலுத்துவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரி விக்கப்பட்டது, அத்துடன் காவல் துறையினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை் தொடர்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப் பட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் கல்லாங்காடு சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.