நாமக்கல்,மார்ச் 21- கூட்டுறவு வங்கியில் வாடிக்கை யாளர்கள் போட்ட பணத்தை கையா டல் செய்த ஊழியரிடமிருந்து பணத்தை பெற்று தரவில்லை என வங்கியை முற்றுகையிட்டு வாடிக் கையாளர்கள் போராட்டத்தில் ஈடு பட்டனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோடு தாலுகா எலச்சிபாளையம் ஒன் றியம் கோக்கலை ஊராட்சியில் கோக்கலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இதில் 2700 க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். உறுப் பினர்கள் அனைவரும் விவசாயிக ளாக உள்ள நிலையில் வங்கியில் வரவு செலவு வைத்து தங்களது பணத்தை டெபாசிட் செய்தும் வைத் துள்ளனர். அவ்வாறு வைத்திருந்த பணத்தை அவர்களது கவனத்திற்கு வராமலேயே வங்கியில் வேலை செய்த பெரியசாமி என்பவர் மோசடி செய்துள்ளார். சுமார் ஒரு கோடி ரூபா யுக்கும் மேல் சுருட்டி விட்டதாக கூறப் படுகிறது. இதன் அடிப்படையில் கடந்த 100 நாட்களுக்கு முன் விவசா யிகள் வங்கி முன்பு ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினார்கள். அப் போது அவர்களை சமாதானப்படுத் திய கூட்டுறவு துறை அதிகாரிகள், 100 நாட்களுக்குள் அனைத்து உறுப் பினர்களையும் அழைத்து. அவரவர் கணக்குகளில் எவ்வளவு மோசடி நடைபெற்றிருக்கிறது என்று கணக் கெடுத்து உரிய தொகையை பெரி யசாமியின் சொத்துக்களை பறி முதல் செய்து ஏலம் விட்டு திருப்பி தருவதாக உத்தரவாதம் அளித்த னர். இதன் அடிப்படையில் பொதுமக் கள் திரும்பி சென்றனர். அமைதி யாக இருந்த நிலையில் 97 நாட்கள் ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை என்பதால் மீண் டும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வங் கியை முற்றுகையிட்டு போராத் டத்தில் ஈடுபட்டனர். தங்களது பணத்தை உடனடியாக திருப்பி தர வேண்டும் என வலியுறுத்தினர். இது குறித்த தகவல் அறிந்த வந்த சரக கூட்டுறவு பதிவாளர் கிருஷ் ணன், வங்கிக்கு வந்து பொதுமக்க ளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தங்களது பணத்தை உடனடியாக திருப்பித் தர வேண்டும் எனவும் நாட் கள் கடத்திச் செல்வதால் எந்த பல னும் இல்லை என்றனர். இதற்கு பதிவாளர் கிருஷ்ணன், 2400 உறுப்பினர்களுக்கு சம்மன் அனுப்பியும் 747 பேர் மட்டுமே நேரில் ஆஜராகி வாக்குமூலம் கொடுத் துள்ளனர். மீதி உள்ள அனைவரும் நேரில் வந்து வாக்குமூலம் கொடுத்து அவர்களது வாக்குமூலத்தை சரி பார்த்த பின் தான் உரிய நடவடிக்கை எடுக்க முடியும் என்றார். சரக துணை பதிவாளர் கிருஷ்ணன் கூறிய பதி லால் கோபமடைந்த விவசாயிகள் சம்மனை பெற்றுக் கொண்டு வாக் குமூலம் கொடுத்த 747 பேருக்கும் கணக்கை விசாரித்து உடனடியாக பணத்தை திருப்பி தர வேண்டு மென்றனர். மேலும், கோக்கலை பஞ் சாயத்து முழுவதும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதா கவும், ஆதார் கார்டு ,ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆகியவற்றை மாவட்ட ஆட்சி யரிடம் ஒப்படைக்க போவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். இத னால் வங்கி முன்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.