districts

img

கல்விக்கடன் வழங்க மறுக்கும் வங்கி கேள்விக்குறியாகும் மாணவர்களின் கல்வி

தருமபுரி, மே 12- தருமபுரியில் கல்விக்கடன் வழங்க மறுப்பதால், அப்பகுதி மாணவர் களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், பெரியாம்பட்டியில் இந்தி யன் ஓவர்சிஸ் வங்கி செயல்பட்டு வரு கிறது. இந்த வங்கியில் பெரியாம்பட்டி, அடிலம், கோவிலுார், பூமாண்ட அள்ளி, இண்டமங்கலம் உள்ளிட்ட ஊராட்சிகளில் இருந்து 100க்கும் மேற் பட்ட கிராமங்களில் உள்ள மக்கள் கணக்கு வைத்துள்ளனர். இந்த வங்கி யில் பயிர்க்கடன், கல்விக்கடன், சுய தொழில் கடன் கேட்டு மக்கள் விண் ணப்பித்துள்ளனர். இவ்வாறு கடன் கேட்டு விண்ணப்பித்தவர்கள் மாதக் கணக்கில் அலைகழிக்கப்படுவதாக வும், வங்கி ஊழியர்களிடம் முறையிட் டால் உரிய பதிலளிப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து பெரியாம்பட்டியைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், என் மகள் பிஎஸ்சி நர்சிங் படித்து வருகிறார்.  கல்விக்கட்டணம் செலுத்த முடியாத தால் மேற்கண்ட வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தேன்.ஆனால், கடந்த 7 மாதங்களாகியும் கல்விக்கடன் வழங்கவில்லை. இவ் வாறு இந்த பகுதியில் மட்டும் 50க்கும் மேற்பட்டோர் கல்விக்கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். கல்வி கட்டணம் செலுத்தாதால் மாணவர் களின் கல்வி கேள்விக்குறியாக  உள் ளது என வேதனையுடன் தெரிவிக் கிறார். ஆகவே, இதுதொடர்பாக சம்மந் தப்பட்ட அரசு அதிகாரிகள் உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என அப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.