ஈரோடு, ஜுலை 21- மக்கள் சேமிப்பு மக்க ளுக்கே என வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் பிரச் சாரம் பவானியில் நடை பெற்றது. பொதுத்துறை வங்கி களை பாதுகாப்போம் என் கிற முழக்கத்துடன் இந்திய வங்கி ஊழியர் சம்மேள னத்தின் சார்பில், 4 ஆயிரம் கிலோ மீட்டர் பிரசார பயணம் ஈரோடு, பெருந்துறை ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு பவானி வந்தடைந்தது. ஒன்றிய மோடி அரசு பொதுத்துறை வங்கி களை தனியார்மயமாக்குவதை கண்டித்தும், கூட்டுறவு வங்கிகளை அரசிடமிருந்து பறிக் காதே, கிராம வங்கிகளின் பங்குகளை தனி யாருக்கு விற்காதே, வாடிக்கையாளர்களின் சேவையை உறுதி செய், மக்களின் சேமிப்பு மக்களுக்கே, மக்களின் சேமிப்பை சூறையாடாதே உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைத்து தமிழகம் முழுவதும் நான்கு முனைகளில் இருந்து வங்கி ஊழியர் சம்மே ளனத்தின் சார்பில் பிரச்சார இயக்கம் நடை பெற்று வருகிறது. கோவை மேட்டுப் பாளையத்தில் சங்க நிர்வாகி சிவலிங்கம் தலைமையிலான குழு ஈரோடு மாவட்டம், பவானிக்கு வந்தது. இதில், மாநிலத் தலை வர் எஸ்.ஏ.ராஜேந்திரன், கோவை மாவட்டச் செயலாளர் ஆர்.மகேஸ்வரன், ஈரோடு மாவட்டச் செயலாளர் பூவேந்திரன் ஆகி யோர் இக்குழுவில் பங்கேற்றுள்ளனர். இந்த பிரச்சார பயணத்தை வரவேற்று, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் பி.பி.பழனிசாமி, வாலிபர் சங்க தாலுகா செயலாளர் கோபால கண்ணன், பிஎஸ்என்எல் பன்னீர்செல்வம், போக்கு வரத்து பரமசிவம். மற்றும் எல்ஐசி ஊழியர் கள் திரளாக கலந்து கொண்டு வரவேற் பளித்தனர்.