districts

img

உதகை: சுற்றுலா பயணிகளை கவரும் பால்சம் மலர்கள்

உதகை, ஜன.16- மலர் கண்காட்சிக்காக தாவரவியல் பூங்கா தயார் செய் யப்பட்டு வரும் நிலையில், கண்ணாடி மாளிகையில் வைக் கப்பட்டுள்ள பால்சம் மலர் அலங்காரம் சுற்றுலா பயணி களை கவர்ந்து வருகிறது. உதகை அரசு தாவரவியல் பூங்காவில் தோட்டக்கலைத் துறை சார்பில் ஆண்டுதோறும் மே மாதம் மலர் கண்காட்சி நடைபெறுகிறது. இந்த மலர் கண்காட்சியை காண லட்சக் கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தற்போது மலர் கண்காட்சிக்காக பூங்காவினை தயார் செய்யும் பணி கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், பூங்கா வில் மலர்கள் இன்றி காட்சியளிக்கிறது. ஆர்வத்துடன் வரும் சுற்றுலா பயணிகள் மலர்கள் இல்லாத பூங் காவை பார்த்து ஏமாற்றம் அடைகின்றனர்.  அதேசமயம், தாவரவியல் பூங்காவில் மலர்கள் இல் லாத நிலையில், கண்ணாடி மாளிகையில் வைக்கப்பட் டுள்ள பால்சம் மலர் கோபுரம் சுற்றுலா பயணிகளை வெகு வாக கவர்ந்து வருகிறது. இவ்வகை மலர்கள் கண்ணாடி மாளிகையில் உள்ள மலர் அலங்காரத்தில் அதிகம் இடம் பெற்றுள்ளது. பூங்காவில் மலர்களை காண முடியாத சுற்றுலா பயணிகள் இந்த மலர்களை கண்டு ரசிப்பது மட்டு மின்றி, அதன் அருகே நின்று புகைப்படம் எடுத்து வருகின்ற னர்.