districts

img

மகளிர் காவல் நிலையத்தில் வளைகாப்பு: எஸ்பி வாழ்த்து

கோவை, டிச.8- சூலூர் மகளிர் காவல் நிலையத் தில் பணிபுரியும் இரண்டாம் நிலை பெண் காவலருக்கு சக காவலர்கள் வளைகாப்பு நடத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், சூலூரில் செயல்பட்டு வரும் கருமத்தம்பட்டி மகளிர் காவல் நிலையத்தில் இரண் டாம் நிலை காவலராக இந்து பிரியா பணியாற்றுகிறார். 8 மாத கர்ப்பிணி யான இவருக்கு வளைகாப்பு செய்ய உடன் பணியாற்றும் காவலர்கள் முடிவெடுத்தனர். இதனையடுத்து, காவல் நிலையத்திலேயே வளை காப்பு நிகழ்ச்சியை நடத்தினர். வளையல் அணிவித்து மஞ்சள், சந் தனம், குங்குமம் உள்ளிட்ட திர வியங்களுடன் 10 வகையான உண வுகளை படையலிட்டு காவலர் இந்து  பிரியாவுக்கு வளைகாப்பு நடத்தி  வைக்கப்பட்டது. இந்த வளைகாப்பு நிகழ்வை கருமத்தம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் தையல் நாயகி முன்னின்று நடத்தினார்.  அப்போது, சூலூர் காவல் நிலை யத்துக்கு வந்திருந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராய ணன், மகளிர் காவல் நிலையத்தில்  வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெறு வதை அறிந்து அங்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்தார். உள்ளே நுழைந்த தும் கர்ப்பிணிக்கு வாழ்த்து தெரி வித்தார். மகளிர் காவல் நிலையத் தில் பணிபுரியும் பெண் காவலர்களே சக காவலருக்கு வளைகாப்பு செய்து வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற் படுத்தி உள்ளது.