நாமக்கல், ஜூன் 25- 10 ரூபாய் நாணயம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை முன்னெடுக்க வணிகர் சங்க பேரமைப்பு மாவட்ட நிர்வா கத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழ்நாடு வணிகர் சங்கங் களின் பேரமைப்பின், நாமக்கல் மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் ஆட்சியரிடம் திங்களன்று அளித்த மனுவில் தெரிவித்திருபபதாவது, இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 10 ரூபாய் நாணயங்கள் அனைத்தும் செல்லும். அவற்றை செல்லாது என கூறுவதோ அதனை பணப்பரிமாற்றத்தின் போது வாங்க மறுப் பதோ சட்டப்படி குற்றமாகும். எனினும், இந் திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என நமது நாமக் கல் மாவட்ட மக்கள் மத்தியில் பரவலாக ஒரு எண்ணம் உள்ளது. அது தொடர்பாக ரிசர்வ் வங்கி பல்வேறு அறிக்கைகளை அளித்த போதும் 10 ரூபாய் நாணயம் செல்லாது என்ற பொய்யான தகவல் பரவிய வண்ணமே உள்ளது. இதன் காரணமாக இன்றள வும் நாமக்கல் மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள கடை களில் 10 ரூபாய் நாணயம் வாங்க மறுக்கிறார்கள். இது தொடர்பாக மாவட்ட வணிகர் சங்கம் மூலம் தொடர்ந்து வணி கர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத் தினாலும் கடைக்கு வரும் வாடிக்கை யாளர்களும், பொதுமக்களும் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதால் வணி கர்களும் அதனை ஏற்க தயங்குகின்றனர். மேலும், பல அரசு அலுவலகங்கள், வங்கி கள், அரசு மற்றும் தனியார் பேருந்துகளிலும் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்ப தாக புகார்கள் எழுகிறது. எனவே, 10 ரூபாய் நாணயம் தொடர்பான பொதுமக்களின் சந்தேகங்களையும், அச் சத்தையும் போக்கும் வகையில் மாவட்ட நிர் வாகம் விழிப்புணர்வு பிரச்சாரங்களை முன் னெடுக்க வேண்டும் என அதில் தெரிவித் துள்ளார். இந்நிகழ்வில் சங்கத்தின் நிர்வாகி கள் கலந்து கொண்டனர்.