கோவை, செப்.28- சூலூர் அருகே உள்ள கேபிஆர் தனியார் கல்லூரியில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா சனியன்று நடைபெற்றது. கோவை மாவட்டம். சூலூர் அடுத்த தென்னம்பாளையம் பகுதியில் உள்ள கே.பி.ஆர் கலை அறிவியல் கல்லூரியில் ஸ்ரீ கவிதாலயம் பவுண்டேஷன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளி யில் பணிபுரியும் 70 நல்லாசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு கல்விக் கலங்கரை 2024 என்ற பெயரில் விருது கள் வழங்கும் நிகழ்ச்சி சனியன்று நடைபெற்றது. இதில், பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கும் 70 நல்லா சிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்விற்கு, சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி சிறப்பு அழைப்பாள ராக கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கி னார்.