அத்திக்கடவு - அவிநாசி திட் டத்தை நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தி தொடர்ந்து போராடிய தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் முக்கிய பங்காற்றியுள்ளது. மாநாடு கள் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வரலாற்று சிறப்பு மிக்க திட்டம் துவக்கவும், இதன்பின் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய பிறகு பல நிலைகளில் தலைவர்கள் ஆய்வு செய்து அரசுக்கும் அதிகாரி களுக்கும் தொடர்ச்சியாக சங்கத் தின் சார்பில் அழுத்தம் தரப்பட்ட தன் விளைவாக இத்திட்டம் தற் போது துவங்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் ஆர்.குமார் விடுத் துள்ள அறிக்கையில், கடந்த 2002 ஆம் ஆண்டு குன்னத்தூரில் வறட்சி நிவாரண கோரிக்கை மாநாடு நடத்தி, விவசாயிகள் சங்கத்தின் அப்போதைய மாநில பொதுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் (தற்போதைய சிபிஎம் மாநிலச் செய லாளர்) கலந்துகொண்டு, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன. இதைத்தொடர்ந்து பெருந் துறை, பெருமாநல்லூர், அவிநாசி போன்ற இடங்களில் பொதுக்கூட் டங்கள் நடத்தப்பட்டன. இந்த பொதுக்கூட்டங்களில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ.சண்முகம் கலந்து கொண்டு உரையாற்றினார். திட் டத்தை விளக்கி லட்சக்கணக்காண எண்ணிக்கையில் பிரசுரங்கள் வெளியிட்டு விவசாயம் மத்தியில் பிரச்சாரம் செய்யப்பட்டது. மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூர் தெற்கு தொகுதி சட்ட மன்ற உறுப்பினராக இருந்த மறைந்த தோழர் கே.தங்கவேல், இத்திட்டத்தை வலியுறுத்தி சட்ட மன்றத்தில் உரையாற்றினார். கடந் தாண்டு ஏப்.12 ஆம் தேதி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ.சண்முகம் தலைமை யில் ஈரோடு, திருப்பூர் மாவட்ட விவ சாயிகள் சங்கத் தலைவர்கள் குழு, திட்டப்பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்து விரைந்து பணிகளை முடிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை கேட்டுக் கொண்டது. முதலில் திமுக அரசு திட்டத்தை ஆய்வு செய்ய நிதி ஒதுக்கியது. தொடர்ந்து வந்த அதிமுக அரசு நிதி ஒதுக்கி திட்டத்தை துவக்கி வைத் தது. தற்போது மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு திட்டத்தில் ஏற்பட்ட இடர்பாடுகளை களைந்து, பணிகளை நிறைவு செய்து, சனியன்று திட்டத்தை துவக்கி வைத்துள்ளது. இதன் மூலம் திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்டங்களைச் சேர்ந்த 10 ஊராட்சி ஒன்றியங்களில் 1045 குளம், குட்டைகள் பயனடைவுள் ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயத்திற்கு அடிப் படை ஆதாரமாக மாறியுள்ளது. திட்டத்தை நிறைவேற்றிய எல் & டி நிறுவனம் ஐந்தாண்டு பரா மரிக்கும் என்று சொல்லப்பட்டுள் ளது. தொடர்ந்து நீர்வளத்துறை முறையான பராமரிப்பு செய்யவும், குளம் குட்டைகள் நிறுவப்பட் டுள்ள ஓஎம்எஸ் கருவிகளை பாது காக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குளம், குட்டையில் உள்ள முட்புதர்களை அகற்றி தண் ணீர் தேங்குவதற்கு ஒரு ஏற்பாடு களை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.