நாமக்கல், ஜூன் 17- தலித் அருந்ததிய மக்கள் நீண்டகாலமாக பயன்படுத்தி வரும் பாதையை தனி நபர் ஒருவர் ஆக்கிரமிக்கும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி திருச்செங்கோடு அருகே மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். மல்லசமுத்திரம் பேரூராட்சி 1 ஆவது வார்டு பகுதியில் 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 1986 ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலமாக, நிலம் எடுத்து தாழ்த்தப் பட்ட மக்களுக்கு அரசின் சார்பில் வழங்கப்பட்டது. இப்பகுதியில், பொதுமக்கள் கடந்த 25 ஆண்டு காலமாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், ஊருக்கு வடக் குப் பகுதியில் உள்ள விவசாய நிலத்தை சேர்ந்தவர் அருந்ததியர் தெருவில் பாதை அமைக்க ஏற்பாடு களை செய்து வருகிறார். இதனை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் கூறுகையில், சம்பந்தப் பட்ட நபருக்கு பட்டா மற்றும் பத்திர பதிவு மூலம் உள்ள வழிப்பாதை யில் செல்லவேண்டும். ஆனால் தனி ஒரு நபர் பொதுப்பாதை வழித்த டத்தை ஆக்கிரமிக்க முயற்சிக்கி றார். இதனை அனுமதிக்க கூடாது. மேலும், இப்பகுதியில் மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க வேண்டும். நூறுநாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் வேலைநாட்களை 200 நாட்களாக அதிகப்படுத்த வேண்டும். நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத் தின் கீழ் பணிபுரியும் தொழிலா ளர்களுக்கு சம்பளம் ரூ.600 வழங்க வேண்டும். நூறுநாள் வேலை வாய்ப்புத் திட்டத்தை பேரூராட்சிக ளுக்கு விரிவுபடுத்த வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற் றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மல்ல சமுத்திரம் கிளைச் செயலாளர் வீ. சுகுமார் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ. ரங்கசாமி துவக்கி வைத்து பேசி னார். எலச்சிபாளையம் ஒன்றிய கவுன்சிலர் சு.சுரேஷ், எலச்சிபாளை யம், மல்லசமுத்திரம் ஒன்றியச் செய லாளர் வீ.தேவராஜ், மாவட்ட குழு உறுப்பினர் ஜீ.பழனியம்மாள், வாலிபர் சங்க ஒன்றிய செயலா ளர் ஆர்.சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதனைய டுத்து ஊராட்சி ஒன்றிய அலுவலக கிராம ஊராட்சி செயலாளர் சுலை மன் பாஷாவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.