திருப்பூர், ஏப்.11- பல்லடம் அருகே உள்ள பருவாய் கிராமம் ஆறாக் குளம் கணபதி நகரில் வசிக்கும் அருந்ததியர் மக்கள், தாங்கள் வசித்து வரும் குடியிருப்பு பகுதியில் வகை மாற்றம் செய்து வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி உள்ளனர். திருப்பூர் மாவட்டம், ஆறாக்குளம் பகுதி மக்கள் திங்களன்று பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பல்லடம் வட்டம், பருவாய் கிராமம், ஆறாக்குளம் புல எண் 53-ல் 70க்கும் மேற்பட்ட அருந்ததியர் குடும்பங்கள் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்ற னர். இதே முகவரியில் உள்ள புல எண் 9 ஆகிய இடங்க ளிலும் நீண்ட காலமாக வசித்து வருகின்றனர். இந்த நிலம் பருவாய் கிராம ஆவணங்களின்படி புறம்போக்கு குட்டையாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இங்கு குட்டை ஏதும் இல்லை. சமன்படுத்தப்பட்ட பூமியாக உள் ளது. எனவே, வருவாய்த் துறை அதிகாரிகள் நேரில் பார்வை யிட்டு ஆவணத்தில் குட்டைப் புறம்போக்கு என இருப் பதை வகை மாற்றம் செய்து இங்கு குடியிருந்து வரும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என அதில் கூறப்பட் டுள்ளது.