தருமபுரி, ஜூலை 18- சலூன் கடையை இடித்த பாஜக ஊராட்சி மன்ற தலைவரை கைது செய்ய வலியுறுத்தி தருமபுரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டத்திற்குட்பட்ட ஜருகு கிராமத்தில் ராஜசேகர். இவர் 36 வருடங்களாக சொந்த சலூன் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், பாஜக நிர்வாகியும், மானியதள்ளி ஊராட்சி மன்ற தலைவரு மான சிவசக்தி என்பவர், தனது சொந்த ரியல் எஸ்ட்டேட்டின் சுய லாபத்திற்காக சலூன் கடையினை இடித்து தள்ளிவிட் டார். மேலும், கடையில் இருந்த பொருட் களை சேதப்படுத்தி, தொடர்ந்து மிரட்டி வருகிறார். எனவே, சிவசக்தியை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தரும புரி பிஎஸ்என்எல் அலுவலம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ் நாடு மருத்துவர் சமூக நலச்சங்க மாநி லத் தலைவர் எம்.நடேசன் தலைமை ஏற்றார். கொள்கை பரப்புச் செயலாளர் சிவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வே.விசுவநாதன், மக்கள் அதிகாரம் மாநில இணைச்செயலாளர் கோபிநாத், விசிக மாவட்ட செய்தி தொடர்பாளர் த.கு.பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.