districts

வைரஸ் காய்ச்சல்: சிறப்பு படுக்கை வசதிகள் ஏற்பாடு

திருப்பூர், நவ.25- திருப்பூரில் வைரஸ் காய்ச்சல் அதிக ரித்து வருவதால், சிறப்பு படுக்கை வசதி களை ஏற்படுத்தி, தீவிர கண்காணிப்பு செய்து வருவதாக மருத்துவர்கள் தெரி வித்துள்ளனர். கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங் களில் பருவ மழை பெய்து வருவதால்,  அதிக குளிர் காற்று வீசுகிறது. இதனால் வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. சிறியவர்கள் முதல் பெரிய வர்கள் வரை வைரஸ் காய்ச்சல் வேகமா கப் பரவி வரக்கூடிய நிலையில், திருப் பூர் மாவட்டத்திலும் காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. இதன் காரண மாக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில் தினந்தோறும் 100க்கும் மேற்பட்டோர் உள் நோயாளி களாகவும் புற நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். சுழற்சி முறையில் மருத்துவர்கள் தொடர் கண் காணிப்பில் பணியாற்றி வருகின்றனர். காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்படு பவர்களுக்காக சிறப்பு படுக்கை வசதி கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ப்ளூ வைரஸ் காய்ச்சல் தொற்று பரவு கிறதா? என்பது குறித்து ரத்தப் பரிசோ தனை மேற்கொள்ளப்படுகிறது. பரிசோ தனை முடிவு வரும் வரை மருத்துவர் கள் கண்காணிப்பிலேயே அவர்கள் இருக்க வைக்கப்படுவதாக மருத்து வர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் காய்ச்சல் தொற்று கண்ட றியப்படுபவர்கள் முகக்கவசம் அணிந்து கொள்ளவும் மருத்துவர்கள் அறிவு றுத்தி வருகின்றனர். சாதாரண காய்ச் சல் கண்டறியப்பட்டாலும் உடனடியாக மருத்துவரை அனுகி மருத்துவ ஆலோ சனை பெறவும் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து திருப்பூர் அரசு மருத்து வமனை மருத்துவர் செண்பக ஸ்ரீ கூறு கையில், கடந்த மாதம் காய்ச்சல் காரண மாக 70 பேர் மருத்துவமனைக்கு வந்தி ருந்தனர். இந்த மாதம் 120 நபர்களாக அதிகரித்துள்ளது. அனைவருக்கும் முறையாக ரத்தப் பரிசோதனை உட்பட அனைத்து பரிசோதனைகளும் மேற் கொள்ளப்படுகிறது. டெங்கு காய்ச்சல் உள்ளவர்களுக்குச் சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தற்போதைக்கு 15 பேருக்கு டெங்குகாய்ச்சல் உள்ளது தெரியவந்துள்ளது. அவர்களுக்கு முறை யான சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், 60 படுக்கை வசதியுடன் கூடிய சிறப்பு சிகிச்சை மையம் தயார் நிலை யில் உள்ளது. தேவைப்பட்டால் கூடுதல் படுக்கை வசதிகள் அதிகரிக்கப்படும் என தெரிவித்தார்.