தாராபுரம், மே 13- தாராபுரம் அடுத்த அலங்கியம் நெல் கொள்முதல் நிலையத்தில் விவ சாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்த 8 ஆயிரம் நெல் மூட்டைகளுக்கு உரிய பாதுகாப்பு இல்லாததால் பாதிக்கு மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்துள்ளன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தாராபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சுமார் 4373 ஹெக்டர்கள் (11,800 ஏக்கர்) நிலப்பரப்பளவில் சம்பா நெல் ஒவ்வொரு ஆண்டும் சாகு படி செய்யப்பட்டு வருகிறது. அறு வடை செய்யப்பட்ட நெல்மணிகளை கொள்முதல் செய்வதற்காக தாராபு ரம் வட்டார பகுதியில் அலங்கியம், தளவாய் பட்டினம் , செலம்பாளையம், சின்னக்காம்பாளையம், நஞ்சியம்பா ளையம், குளத்துப்பாளையம் மற்றும் சத்திரம் உள்ளிட்ட 7 இடங்களில் அரசு கொள்முதல் நிலையங்கள் செயல் பட்டு வருகின்றன. இந்நிலையில், அலங்கியம் மற்றும் அதைச் சுற்றி யுள்ள பகுதி விவசாயிகள், அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகளை சாக்கு மூட்டையில் நிரப்பி தைத்து, வாக னங்களில் விற்பனைக்காக சுமார் 8 ஆயிரம் நெல் மூட்டைகள் கொண்டு வந்துள்ளனர். இவ்வாறு கொண்டு வரப்படும் நெல் மூட்டைகளை ஆன் லைன் மூலம் பதிவு செய்த பிறகு, விவசாயிகள் கொண்டு வந்த மூட்டை களுக்கு பணம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.
அலங்கியம் கொள்முதல் நிலை யத்திற்கு கொண்டு வந்த நெல் மூட்டை களை உடனடியாக கொள்முதல் செய் யாததால் அந்த மூட்டைகளை வெட்ட வெளியில் அடுக்கிவிட்டு விவசாயி கள் செல்கின்றனர். விவசாயிகள் நெல் மூட்டைகளை மூடி வைப்பதற்கு போது மான தார்ப்பாய்கள் மற்றும் பாது காப்பு நிலைகள் இல்லை. கடந்த சில நாட்களாக அப்பகுதியில் பெய்த மழை யில் நெல் மூட்டைகள் நனைந்து நெல் கள் முளைத்து துளிர் விட்டுள்ள தால் விவசாயிகள் பெரும் நஷ்டம டைந்துள்ளனர். மேலும், மழையில் நனைந்த நெல் மூட்டைகளை விவ சாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இதுகுறித்து, விவசாயிகள் கூறு கையில், தாராபுரத்தை அடுத்து அலங் கியம் பகுதியில் விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை ஆன்லைன் மூலம் பதிவு செய்த பின்பு நெல்களை லாரிகள் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைப்பது வழக்கம். ஆனால், 15 நாட்கள் ஆகியும் வாகனங்களை அதிகாரிகள் ஏற்பாடு செய்யாததால் மழையில் நனைந்து நெல் முளைப்பதற்கு முக்கிய காரண மாக உள்ளனர். மேலும், ஒரு மூட்டை நெல்லுக்கு லாரி வாடகை ஏற்று கூலி உள்பட விவசாயிகளிடமிருந்து அதி காரிகள் ரூ.30 ஏற்றுக் கூலி மற்றும் வாடகையாக வசூல் செய்கின்றனர். ஆனால், கூலி லாரி வாடகைக்கு ரூ.16 மட்டுமே கொடுத்துவிட்டு, மீதம் உள்ள ரூ. 14 அதிகாரிகளே வைத்துக் கொள்வ தாக குற்றம்சாட்டுகின்றனர். மேலும், மழையில் நனைந்து முளைவிட்ட நெல் மூட்டைகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டும் எனவும் விவசாயி கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள் ளனர்.