districts

img

தூய்மைப் பணியாளர்களுக்கு பாராட்டு விழா

சேலம், ஜூன் 29- மேட்டூர் நகராட்சியில் பணியாற்றி, ஓய்வுபெற்ற தூய்மைப் பணியாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப் பட்டது. சேலம் மாவட்டம், மேட்டூர் நகராட்சியில் தூய்மைப் பிரிவில் பதிலிப் பணியாளர்களாக, தொகுப்பூதியத்தில் பணியாற்றி, நிரந்தரம் பெற்று 35 ஆண்டுகளுக்கு மேல்  சிறப்பாக பணியாற்றிய 3 தொழிலாளர்கள் வெள்ளி யன்று பணி ஓய்வு பெற்றனர். இந்நிலையில், 3 தொழி லாளர்களையும் பாராட்டி வழியனுப்புகின்ற நிகழ்ச்சி மேட்டூர் நகராட்சி கூட்டரங்கில் வெள்ளியன்று நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மேட்டூர் நகர்மன்றத் தலை வர் சந்திரா தலைமை வகித்தார். சுகாதார அலுவலர் லூர்துசாமி, சுகாதார ஆய்வாளர் மற்றும் தூய்மைப்பணி மேற்பார்வையாளர்கள், ஓய்வுபெறுகின்ற தொழிலா ளர்களது குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். ஓய்வு பெறுகின்ற தொழிலாளர்களை பாராட்டி பலரும் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கினர். சிஐடியு செயலாளர் சி.கருப்பண் ணன், ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு மரியாதை செலுத்தினார்.

;