districts

img

வன்முறை எதிர்ப்பு தின கருத்தரங்கம்

திருப்பூர், டிச.1- வன்முறை எதிர்ப்பு தின கருத்தரங்கம் தியாகி பழனி சாமி நிலையத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் சிஐடியு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு  சார்பில் வியாழனன்று நடைபெற்றது. வன்முறை எதிர்ப்பு தின கருத்தரங்கத்திற்கு மாதர் சங்க  மாவட்டத் தலைவர் எஸ்.பவித்திர தேவி தலைமை வகித்தார்.  சிஐடியு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு  மாவட்ட இணை அமைப்பாளர் கே.எல்லம்மாள் வரவேற்றார்.  மாதர் சங்க மாநிலச் செயலாளர் ஜி.ராணி, சிஐடியு உழைக்கும்  பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு மாநில இனை அமைப் பாளர் ஆர்.மாலதி ஆகியோர் சிறப்புரையாற்றினர், இதில், சிஐடியு அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்டச் செய லாளர் கே.சித்திரா, மாதர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் எஸ். மாலதி உட்பட 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட னர். முடிவில் மாதர் சங்க மாவட்டப் பொருளாளர் ஆர்.கவிதா  நன்றி கூறினார்.