districts

img

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்

திருப்பூர், மே 27- சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த  வேண்டும், தனியார் துறையில் இட  ஒதுக்கீடு வழங்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி  சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் திருப்பூர் மாவட்டச் செயலா ளர் சி.கே.கனகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப் பாட்டத்தில், சாதிவாரிக் கணக்கெ டுப்பு நடத்தக் கோரி இந்தியா முழு வதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. பீகார் தேர்தல் வரு வதை ஒட்டி சாதிவாரிக் கணக்கெ டுப்பு நடத்தப்படும் என்று ஒன்றிய  மோடி அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் நடப்பு பட்ஜெட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு நிதி ஒதுக்கவில்லை. சாதிவாரிக் கணக்கெடுப்பில் என்னென்ன தரவு கள் திரட்டப்படும் என்றும் அறிவிக்க வில்லை. சாதிவாரிக் கணக்கெ டுப்பு நடத்தினால்தான் கல்வியில், வேலையில், வளங்களைப் பகிர்வ தில் பயன் பெறும் சாதிகள் மற்றும்  பயன் பெறாத சாதிகள் குறித்து தெரிய வரும். மேலும், இந்த பாகு பாடுகளை சரி செய்ய சாதிவாரிக்  கணக்கெடுப்பு அவசியம். தற் போது உள்ள சூழலில் தனியார்  துறையில் இட ஒதுக்கீடு தேவைப்ப டுகிறது என வலியுறுத்தி முழக்கங் கள் எழுப்பினர். இதையடுத்து,  தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்டச் செயலா ளர் ஆர்.குமார், மாணவர் சங்க மாநி லத் தலைவர் சம்சீர் அகமது, சிஐ டியூ மாவட்ட துணைத் தலைவர்  பி.பாலன், ஆதித்தமிழர் ஜனநாயக  பேரவை நிறுவனர் பவுத்தன், திரா விடர் விடுதலை கழகம் மாவட்டத்  தலைவர் முகில் ராசு, தந்தை பெரி யார் திராவிடர் கழகச் செயலாளர்  சண்.முத்துக்குமார், சமூக விடு தலை கட்சி எம்.பி.ஆறுமுகம், திரா விடர் கழகம் தலைவர் ஆறுச்சாமி, ஆதித்தமிழர் பேரவை நிர்வாகி கவிதா, மக்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் கார்மேகம், புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில் வேலு உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசி னர். இதில், தீண்டாமை ஒழிப்பு முன் னணி மாவட்டத்தலைவர் ச.நந்த கோபால், பொருளாளர் அ.பஞ்ச லிங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் மாவட்டச் செயலாளர்  சி.மூர்த்தி, சிஐடியூ மாவட்ட  துணைத்தலைவர் கே.உண்ணிகி ருஷ்ணன், சுமைப்பணி சங்கத் தலைவர் எம்.ராஜகோபால் உள் ளிட்டு திரளானோர் பங்கேற்றனர்.