districts

img

அக்னிபாத் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜூன் 28 – ஒன்றிய அரசின் அக்னிபாத் திட்டத்தை கைவிட வலியு றுத்தி திருப்பூர் கே.வி.ஆர். நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாரப்பாளையம் கிளைச் செயலாளர் அ.லெனின்குமார் தலைமை வகித்தார். மாநகரச் செயலாளர் த.ஜெயபால், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.சுந்தரம், மாநகரக்குழு உறுப்பினர்கள் பி.பாலன், பா.ஞானசேகரன் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்  கே.உண்ணிகிருஷ்ணன், மாநகரக்குழு உறுப்பினர்கள் ஜி. செந்தில்குமார், நா.சஞ்சீவ், த.ஆறுக்குட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;