districts

img

மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை, அக்.10- கோவையில் மக்களை  தேடி மருத்துவ ஊழியர்  சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் கோவை  பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் செவ்வாயன்று நடைபெற்றது. 18 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் ஒருபகுதியாக கோவையில் நடைபெற்றது. இதில்,  மக்களை தேடி மருத்துவ ஊழியர் களுக்கு, அரசு அறிவித்த ஊக்கத்தொகை ரூ.2 ஆயிரம் உடனடியாக வழங்க வேண்டும்.  ஊதியத்தை வங்கி கணக்கில் நேரடியாக வழங்க வேண்டும் என முழக்கங்கள் எழுப் பினர். இதில், சிஐடியு மாநில துணைத்தலைவர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பொதுச் செயலாளர் லட்சுமி உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினர். இதில் திரளானோர் பங்கேற்றனர்.