districts

img

தோழர் சங்கரய்யாவிற்கு அனைத்துக்கட்சி புகழஞ்சலி

ஈரோடு, நவ.22- மார்க்சிஸ்ட் கட்சியின் முதுபெரும் தோழர் என்.சங்கரய்யாவிற்கு, அனைத்துக்கட்சியினர்  புகழஞ்சலி செலுத்தினர். சுதந்திரப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி முதுபெரும் தலைவரும், தகைசால் தமிழர் விருது பெற்றவருமான தோழர் என்.சங்க ரய்யாவிற்கு புகழஞ்சலி கூட்டம் பவானி வட்டம்,  கவுந்தப்பாடியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு  கே.ஆர்.சண்முகம் தலைமை வகித்தார். அதிமுக கவுந்தப்பாடி ஊராட்சி செயலாளர் அண்ணன் ஆறு பையன், மதிமுக பவானி ஒன்றியச் செயலா ளர் சோ.வீரக்குமார், போக்குவரத்து ஊழியர் சங் கம் அர்ஜுனன், மின்னரங்க  தலைவர் எம்.ஆர். பெரியசாமி, பிஎஸ்என்எல் நடராஜன் மற்றும் மூத்த  தோழர் ஏ.அய்யாவு ஆகியோர் கலந்து கொண்ட னர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.பி.பழனிச்சாமி, தாலுகா செயலாளர் எஸ்.மாணிக்கம் ஆகியோர் புகழஞ் சலி உரையாற்றினர். கோவை  தோழர் என்.சங்கரய்யா படத்திறப்பு விழா மற் றும் புகழஞ்சலி கூட்டம் கோவை, பெரியநாயக் கன்பாளையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் பிஎன்பி ஒன்றிய குழு உறுப்பி னரும், பேரூராட்சி கவுன்சிலருமான நவ.சிவராஜன் தலைமை ஏற்றார். தோழர் என்.சங்கரய்யா படத்தை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் திறந்து வைத்தார். இந் நிகழ்வில் கூடலூர் நகராட்சி தலைவர் அறிவ ரசு, பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி தலை வர் விஸ்வபிரகாசம், காங்கிரஸ் பிரபாகரன், அதி முக நகரச் செயலாளர் ரகுநாதன், ஜெயராஜ், சிபிஐ(எம்எல்) மாவட்டச் செயலாளர் பாலசுப்பிர மணியம், விசிக ராகவன், தேமுதிக ஆரோக்கிய சாமி, தபெதிக ராமசாமி, மார்க்சிஸ்ட் கட்சியின்  மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் யு.கே.சிவஞா னம், கே.அஜய்குமார், பிஎன்பி ஒன்றியச் செயலா ளர் எம்.மோகன்ராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் ந. ராஜா உட்பட திரளானோர் பங்கேற்றனர்.