districts

நாமக்கல்லில் இன்று எழுச்சியுடன் துவங்குகிறது

நாமக்கல், செப். 18- ஆதிவாசி உரிமைகளுக்கான தேசிய அமைப்பின், 4 ஆவது அகில இந்திய மாநாடு, நாமக்கல் மாவட்டத்தில் இன்று (செவ்வா யன்று) எழுச்சியுடன் துவங்குகிறது. நாமக்கல் மாவட்டத்தில், கொங்கு மண் டபத்தில் மூன்று நாட்கள் நடைபெறும் இம் மாநாட்டில், 17 மாநிலங்களில் இருந்து ஆதி வாசி மக்களின் உரிமைக்காக களம் கண்டு வரும் பிரதிநிதிகள் பங்கெடுக்க உள்ளனர். இம்மாநாட்டில், ஆதிவாசி மக்களின் உரி மைக்காக நடைபெற்ற போராட்டங்கள் குறித் தும், எதிர்வரும் காலத்தில் உரிமைகளை மீட் டெடுப்பதற்கான இயக்கங்கள் குறித்தும் மாநாடு ஸ்தூலமாக விவாதித்து தீர்மானங் களை இயற்ற உள்ளது.  முன்னதாக, செவ்வாயன்று காலை, மாநாட்டு பிரதிநிதிகளின் எழுச்சிகர முழக் கங்களுக்கிடையே கொடியேற்றமும், இத னைத்தொடர்ந்து தியாகிகள் நினைவு ஜோதி கள் பெறும் நிகழ்வும் நடைபெறும். பின்னர், மாநாட்டை கேரளம் மாநில தொழில்துறை அமைச்சர் ராஜீவ் துவக்கி வைக்கிறார். இத னைத்தொடர்ந்து, நடைபெறும் பிரதிநிதிகள் மாநாடு நடைபெறும்.  இரண்டு நாட்கள் பிரதிநிதிகள் மாநாடும், மூன்றாவது நாளான செப்.21 ஆம்தேதி நிறைவு நாளில், பழங்குடி மக்கள் 20 ஆயிரம் பேர் பங்கேற்கும், பண்பாட்டுப் பேரணி, கலாச்சாரம், நடனம், இசை நிகழ்ச்சியுடன் துவங்க உள்ளது. நிறைவாக நடைபெறும் பொதுக்கூட்ட நிகழ்வில், மார்க்சிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்  பிருந்தாகாரத், அமைப்பின் ஒருங்கினைப்பா ளர், ஜிதேந்திர சவுத்ரி மற்றும் நிர்வாகிகள் பெ.சண்முகம், பாபு ராவ், குளின் பாஸ்கி, திருப்பதி ராவ், டில்லிபாபு, சரவணன், பொன் னுசாமி உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்ற உள்ளனர்.