districts

img

இரட்டை இலைச் சின்னம் முடக்கமா? தென்னமர சின்னத்தில் போட்டியிடும் அதிமுக

அவிநாசி, ஜூன் 28- அவிநாசியில் ஊராட்சி ஒன்றிய கவுன் சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிடு கிற வேட்பாளருக்கு தென்னை மரம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.  தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சி தேர்தல் காலியாக இருக்கும் இடங்களுக்கு தேர்தல் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்நிலையில், அவிநாசி ஒன்றியம், உப்பி லிபாளையம், ராமநாதபுரம், ஊராட்சி ஒன் றிய கவுன்சிலர் 16 ஆவது வார்டில் அதிமுக  சார்பில் சுரேஷ்குமார் போட்டியிடுகிறார். இதனைத்தொடர்ந்து, திங்களன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். செவ்வாயன்று நடை பெற்ற வேட்புமனு பரிசீலனையில் சின்னம் ஒதுக்கீடு நடைபெற்றது. இதில் அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் இல்லாமல், தென்னை மரம் சின்னம் ஒதுக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.  இதுகுறித்து அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலக தேர்தல் நடத்தும் அதிகாரிகளி டம் கேட்டபோது, அதிமுகவை சேர்ந்த போட்டியிடும் நபர்களுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது குறித்து கட்சி தலை மையிலிருந்து மாவட்ட நிர்வாகிகள் கையொப் பமிடும் கடிதம் வழங்குவதில் குழப்பம் ஏற் பட்டுள்ளது. இதன் காரணமாக  அவர்க ளுக்கு தென்னை மரச்சின்னம் ஒதுக்கப் பட்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து  அதிமுகவில் போட்டியிடும் நபர் சுவரொட்டி யில், தென்னை மரச்சின்னமும் ஓபிஎஸ் படம் இன்றி எடப்பாடி பழனிச்சாமி, அணி ஆதரவு புகைப்படம் மட்டுமே ஒட்டப்பட்டிருந்தது.